Saturday, October 8, 2011

தமிழனுக்கு துரோக தலைவர்கள்: மலையாளிகள் எப்போதும் பகையாளிகள்தான்


:

பேராசிரியர் யோகீசுவரன் எழுதிய திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு என்ற புத்தகம் வெளியீட்டு விழா  அண்மையில் சென்னை தேவநேயப் பாவணர் அரங்கில் நடந்தது. அந்த  நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன்.
தலைவர்களின் பேச்சுக்களை எல்லாம் கேட்டேன்.  நிகழ்ச்சி முடிந்து வெளியில் வரும்போது, மனவேதனையடைந்தேன்.
எப்போது நாம் திருந்துவோம் ?  என்ற கேள்வி எழுந்தது. அதற்கான காரணங்களையும், தலைவர்களின் கருத்துக்களையும் கொஞ்சம் படியுங்கள். தமிழகம், தமிழ், தமிழன் ஆகிய மூன்றும் வளம் பெற நாம் முயற்சிக்க வேண்டாமா?

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், ‘பேசியே நாட்டை கெடுத்த தலைவர்கள். அந்த பேச்சை கேட்டு நாசமாகபோன மக்கள்’ என்று சூடான வார்த்தைகளுடன் பேச்சை தொடங்கினார்.
‘பல்கலைகழகமோ , காசுக் கொடுத்து படிக்க வேண்டிய நிலையோ இல்லாத அந்த காலத்தில் மணல் பரப்பி எழுதப் படித்த காலத்தில் ஆயிரத்து 330 குறள்களை வள்ளுவன் எழுதினான். அந்த குறள் போல, ஆயிரத்து 331வது குறளை இதுவரை எவனும் எழுதியதும் கிடையாது. எழுதப்பட்ட குறளில் கூறப்பட்டதை பின் தொடர்ந்து யாரும் வாழ்ந்ததும் கிடையாது’ என்றார்.
விவிலியம் ஹீப்ரூ, லத்தீன் மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்று சொன்ன மத குருக்கள், பிரான்ஸ் நாட்டில் நடந்த புரட்சியை ஓடுக்க, ஜோகன்பார்க் தேவாலாயம் முன்பு பேராட்டக்காரர்களை தீ வைத்து எரித்தனர்.
ஜெர்மனியில் எழுதப்பட்ட புத்தகத்தை தமிழகத்தில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர். அதுவும் தடை செய்யப்பட்ட புத்தகம் என்றால், அதை தேடி பிடித்து படித்து விடுவோம்.  ஆனால் மொழி வழி மாநிலம் அமைய நடந்த போராட்டம் குறித்து இந்த தலைமுறையினருக்கு தெரிந்து கொள்ளும் விதமாக எழுதப்பட்ட இந்த புத்தகத்தை எத்தனை பேர் படிப்பார்கள்?
ஒரே மொழி பேசும் தெலுங்கு மக்களிடம் தனித் தெலுங்கானா கேட்டு போராட்டம் நடக்கிறது. அந்த பிரச்னையை தீர்க்க 6 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசும் ஆலோசனை செய்து வருகிறது. முடிவு எடுத்தபாடிலில்லை.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார். சரி ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று ஒரு குழுவை அமைத்தது மத்திய அரசு. அந்த குழு நடத்திய முதல் கூட்டத்தில், ஊழல் என்றால் என்ன? அதன் வரையறை என்ன? என்று ஆய்வு செய்கிறது.
இதற்கு முன்பு இந்து என்ற மததத்தை வரையறை செய்ய நேரு, ராஜேந்திரபிரசாத் ஆகியோர் தலைமையில் தீவிர ஆலோசனை செய்யப்பட்டது. மற்ற மதங்கள் எல்லாம் மனிதர்களால் தொடங்கப்பட்டது. இந்து மதம் என்பது தெய்வத்தால் தொடங்கி வைக்கப்பட்டது. கல் தோன்றி, மண் தோன்றா காலத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது இந்து மதம் என்றெல்லாம் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
இந்து மதத்தில் சைவர், வைணவர் என்று பல பிரிவுகள் உள்ளது. இப்போது இந்து என்றால் எப்படி வரையறை செய்வது?  இரவு பகலாக விவாதித்தனர் தலைவர்கள்.
சமஸ்கிரத புலவர்கள் எல்லாம் ஆலோசனை செய்தார்கள். 6 மாதங்களுக்கு பின்னர், இந்து மதத்தை வரையறை செய்தனர். எப்படி தெரி
யுமா?
கிறிஸ்துவர், முஸ்லீம், பார்சி மதத்தை சேராதவர்கள் யாரோ அவர்கள் இந்துகள் என்று அழைக்கப்படுவார்கள் என்று முடிவு செய்தனர். யாரெல்லாம் கிறிஸ்துவர் இல்லையோ, யாரெல்லாம் முஸ்லீம் இல்லையோ, யாரெல்லாம் பார்சி இல்லையோ அவர்கள் எல்லாரும் இந்துக்கள் என்று அருமையாக கண்டு பிடித்தனர்.  எவ்வளவு பெரிய கண்டு பிடிப்பு.
இதேபோன்ற கண்டு பிடிப்புதான் தமிழகம். எப்படி என்று கேட்கிறீர்களா? கேரளா, ஆந்திரா, கர்நாடகா  ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் எடுத்ததுபோக,  மிச்சம் இருப்பது தமிழகம்.  இப்படித்தான் அப்போது மொழி வாரியான மாநிலம் அமைக்கப்பட்டது.
தேசியம் என்ற பெயரில் இதை எல்லாம் நாம் விட்டுக் கொடுத்தோம்.
தன்னையும், தன் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாக்க முடியாமல் இழந்து விட்டால், அவற்றை எல்லாம் இறக்குமதி  செய்ய முடியாது.
காவிரி நதி  2 பாறைக்கு மத்தியில் இருந்து விழுகிறது. அதில் ஒரு மின்நிலையம் அமைத்து மின்சாரம் தயாரிக்கலாம். ஆனால் இரு மாநில மக்கள் பிரச்னையால், அதுவும் நடக்கவில்லை.  தண்ணீர் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை வேறு.
அசாம் மாநிலத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் 9 மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 7 மாநிலங்கள் மின்சாரத்தை பெற்று பயனடைகிறது. ஆனால் காவிரியில் ஒரு மின்நிலையம் கூட அமைக்க முடியவில்லை.
மொழிவாரி மாநிலம் பிரியும்போது தமிழன் தேசியம் பேசினான். மலையாளிகள், கர்நாடகத்தார் எல்லாம் தங்களது இனத்தை பேசினர். அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள். நாம் இப்படி இருக்கிறோம்.
இப்படி தா. பாண்டியன் பரபரப்பாகவும், சிந்திக்கச் செய்யும் தகவல்களுடன் பேசி முடித்தார்.
இதன்பின்னர் பேசிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் க.ப. அறவாணன், ‘வடபகுதியில் கவனம் செலுத்திய தேசிய கட்சியும், திராவிட கட்சிகளும் தென் தமிழகத்தின் மீது கவனம் செலுத்தாது வருத்தம் அளிக்கிறது. ஈழ தமிழன் கொத்துக் கொத்தாக செத்து மடியும் போது, அது அவன் பாடு என்று இருந்த தமிழக தமிழன் எப்படி உருப்படுவான்? செக்கஸ்லோவியா பிரச்னையில் அமெரிக்க குண்டு சீன துõதரகத்தின் மீது விழுந்தது. ஒட்டுமொத்த சீனாவும் ஒன்று திரண்டது. அமெரிக்கா மன்னிப்பு கேட்டது.’
ஆனால் 1 லட்சத்து 30 ஆயிரம் தமிழன் குண்டு மழையில் செத்து மடியும் போது, தமிழகத் தமிழன் எல்லாரும் டி.வி.யில் சினிமா  பார்த்துக் கொண்டிருந்தோம்.
எப்போதுமே மலையாளிகள், தமிழர்களை எதிரிகளாக பாவிக்கிறார்கள். இலங்கைப் போரில் தமிழன் கொத்துக் கொத்தாக மடிந்ததற்கு காரணமே மலையாளிகள்தான். வரலாற்றில் மலையாளிகள் எப்போதுமே புத்திசாலிகள். அதனால்தான் சேர, சோழ, பாண்டியன் என்று பாண்டியன் கடைசியில் வருகிறான். சேரன் முதலிடத்துக்கு வருகிறான்.
இலங்கைத் தமிழன் சாவுக்கு சிவசங்கர மேனன், எம்.கே. நாராயணன், அந்தோணி, நிருபமாராவ் ஆகிய 4 மலையாளிகள்தான் காரணம்.  இவர்கள் மத்திய அரசை ஆட்டிப்படைக்கின்ற மலையாளி கூட்டங்களின் தலைவர்கள்
மலையாளிகள் சாதுர்யமானவர்கள், மதி கூர்மையானவர்கள்.
சென்னையில் இருக்கிற கடலுக்கு வங்காள விரிகுடா. வங்காளம் எங்கு இருக்கிறது. சென்னை எங்கு இருக்கிறது? யோசித்துப் பாருங்கள் ஏன் அந்த கடலை பழமையான நகரமான மைலாப்பூர் கடல், திருவல்லிக்கேணி கடல் என்று ஏன் அழைக்க தமிழன் முயற்சிக்கவில்லை. மற்றொரு கடலின் பெயர் அரபிக் கடலாம். அரேபியா எங்கு இருக்கிறது? தமிழகம் எங்கிருக்கிறது? அந்த அளவுக்கு தமிழன் துõங்கியிருக்கிறான்... மாடு...?
கன்னியாகுமரி மாவட்ட தமிழர்கள் போராட்டம் நடத்தவில்லை என்றால், அந்த தமிழர்கள் பகுதிகளை எல்லாம் கேரளத்துக்கு கொடுத்து இருப்பார்கள்.
உலகில் ஐரோப்பிய முறை, யூதமுறை, நீக்ரோ முறை என்று 3 விதங்கள் உள்ளன. இதில் ஐரோப்பிய முறை என்றால், ஒரு இடத்துக்கு வருவார்கள், காலனி அமைப்பார்கள். அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு தங்களது மொழியை கற்றுக் கொடுப்பார்கள். அந்த மக்களின் பழக்க வழக்கங்கள், கலாசாரங்களை அழிப்பார்கள். தங்களது கலாசாரத்தை திணிப்பார்கள். ஆசியாவிலேயே ஜப்பானியர்கள் மட்டுமே ஐரோப்பா முறையில் இருந்து தப்பித்தனர்.
இரண்டாவது யூத முறை. இவர்கள் கேரளா, மேற்கு வங்காளத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளனர். இந்த மக்கள், தங்களது பழக்கம், வழக்கம், மொழி ஆகியவற்றை தீவிரமாக பின்பற்றுவார்கள். ஆனால் குடியேறிய பகுதிகளில் உள்ள மக்களிடம் திணிக்க மாட்டார்கள். அதேநேரம் அப்பகுதியில் உள்ள மக்களின் பழக்க வழக்கம், கலாசார, பண்பாடுகளையும் பின்பற்ற மாட்டார்கள். சீர்குலைக்கவும் மாட்டார்கள். இன்று கூட கேரளா, மேற்குவங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ள யூதர்கள், ஹீப்ரூ மொழியில்தான் வழிபாடுகளை நடத்துகின்றனர்.
மூன்றாவது ரகம், நீக்ரோ முறை. இந்த முறை, தம்முடைய பாரம்பரியம் பழக்க வழக்கங்களை துõக்கி வீசி விட்டு, பிறருடைய பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பின்பற்றும் பழக்கம் உள்ள முறை. இந்த முறையைத்தான் தமிழனும் பின்பற்றுகிறான். நீக்ரோ முறைதான் தமிழன் முறை. கலாசாரம், பழக்க வழக்கம், பண்பாடு எல்லாவற்றையும் அழித்து வருகிறான்.
இப்படி அறவாணன் ஆவேசமாக பேசி முடித்தார்.
இதன்பின்னர் பேசிய தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் பெ. மணியரசன், ‘திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து தாய் தமிழகத்தை மீட்க துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த தியாகம் இப்போதுள்ள தமிழன் எத்தனை பேருக்கு தெரியும்?
இந்த போரட்டத்தின் கதாநாயகர்களான குஞ்சன்நாடார், நேசமணி ஆகியோரைப் பற்றியும் இந்த தலைமுறையினருக்கு தெரியாது.
தெற்கு போராட்டம் போல், வடதமிழக போராட்டத்திலும் 2 பேர் உயிர் துறந்துள்ளனர். பக்தவத்சலத்தின் நடவடிக்கையால் 300 பேர் இறந்துள்ளனர்.
இதெல்லாம் பள்ளி பாடப்புத்தகத்தில் சொல்லித்தரப்படுவதில்லை. 5 ஆண்டுகள் மட்டுமே முதல்வராக இருப்பவரின் வாழ்க்கை வரலாறு மாணவர்களுக்கு சொல்லித்தரப்படுகிறது.
தமிழனின் வரலாற்றையும் உண்மைகளையும், கலாசாரத்தையும் சொல்லித் தருவதில்லை. 
திருவிதாங்கூர் போராட்டத்தில், தேவிகுளமும், பீரிமேடும் நமக்கு கிடைத்திருந்தால், முல்லைப் பெரியாறு பிரச்னையே வந்து இருக்காது.
போராட்டக்காரர்கள் தேவிகுளத்தையும், பீர்மேட்டையும் எப்படியாவது தமிழகத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காமராஜரிடம் வலியுறுத்தினர். ஆனால், குளமாவது, மேடாவது? எல்லாம் நம்ம தேசத்தில்தானே இருக்கிறது என்றுகாமராஜர் கூறி விட்டார். திமுகவும் சம்பிரதாய போராட்டத்தை மட்டுமே நடத்தியது. உணர்வு பூர்வமாக நடத்தவில்லை.
ஆனால் மலையாளிகள், தமிழகத்தின் பெரும் பகுதியை கையகப்படுத்த அங்குள்ள தலைவர்கள் எல்லாம் ஒன்றாக, ஒற்றுமையாக செயல்பட்டனர். அந்த ஒற்றுமை தமிழகத்தில் இல்லை.
மலையாளிகள் தொடர்ந்து தமிழர்களை பகையாளிகளாக நடத்துகின்றனர். 
தமிழ்நாடு மலையாளிகள் சங்கத்தின் கூட்டம் சென்னையில் நடக்கிறது. கேரளா மாநிலத்தின் பிற மாநிலங்களில் வாழும் மலையாளிகள் நலத்துறை செயலர் மனோஜ்குமார் பங்கேற்று பேசுகிறார்.
ஆனால் தமிழகத்தில் அப்படி ஒரு துறை உள்ளதா? வெளிநாடுகளில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழ்குடிமகன் அமைச்சராக இருக்கும்போது கேட்டோம். செய்கிறேன் என்றார், அதன்பின்னர்  எந்த பதிலும் இல்லை.
ஆனால் கேரளா அதிகாரி மனோஜ்குமார், “சென்னையில் இருக்கும் மலையாளிகளுக்கு எல்லா உதவிகளையும் கேரளா அரசு வழங்கும். நிதி உதவியும் வழங்கும்  என்று பேசிச் சென்றுள்ளார். அது இந்து பத்திரிகையில் செய்தியாக வெளியாகியுள்ளது.
கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது விடுமுறை கிடையாது. ஆனால் தமிழகத்தில் வாழும் மலையாளிகளுக்கு ஓனம் பண்டிகைக்கு விடுமுறை வழங்கினார் கருணாநிதி.
கேரளா முதல்வர் அச்சுதானந்தன் கேட்டதால், கருணாநிதி விடுமுறை கொடுத்தார். ஆந்திரா முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் இறந்ததற்கு, தமிழகத்தில் கருணாநிதி விடுமுறை அறிவித்தார்.
தமிழகத்தில் துரோக அரசியல் கட்சிகள் ஆட்சி செய்வதால் இந்த நிலை. தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளுமே அப்படித்தான்.
கன்னியாகுமரியை இப்போதும் கேரளாவுடன் சேர்க்க வேண்டும் என்று நாயர் சங்கம் கேட்கிறது. 
ஒரே இனம், ஒரே மொழி கொண்ட மக்களை கொண்டே ஒரு தாயகம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் உலக நியதி. வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழகம் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். த மிழக குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதி. சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்றும் தொல்காப்பியத்தில் தமிழ்தேசம் என்றும் குறிப்புகள் வருகின்றன.
ஆனால் தமிழினம் என்பது 15 ஆண்டுகளில் கலப்பினமாக மாறி விடும்.  விரைவில் தமிழ்நாட்டில் தமிழன் 50 சதவீதம் பிற மாநிலத்தவன் 50 சதவீதம் என்ற நிலை வந்து விடும்’ என்று அவர் ஆவேசமாக பேசி முடித்தார்.
இந்த தலைவர்கள் பேச்சை கேட்கும்போது, தமிழர்களாகிய நமக்கு எவ்வளவு கேவலமாக இருக்கிறது?  காமராஜர், சி.சுப்ரமணியம், ராஜாஜி உள்ளிட்ட தலைவர்கள் தமிழர்களாக இருந்திருந்தால், முல்லைப் பெரியாறு பிரச்னையால் தமிழன் பாதிக்கப்பட மாட்டான். ஆனால் அந்த தலைவர்கள் எல்லாரும் இந்தியா, இந்தியர்கள் என்று சொல்லி நம் இனத்தை புதைகுழியில் தள்ளிவிட்டனர்.
சரி பெரியார், அண்ணா, கருணாநிதி நிலை என்ன என்றால், இவர்கள் எல்லாரும் திராவிடர்கள் என்ற நிலையில் இருந்தார்கள். ஒருவர் கூட தமிழனாக இல்லை. தேசியம் பேசிய தலைவர்களால் புதை குழியில் தள்ளப்பட்ட நம் இனம், இந்த திராவிட தலைவர்களின் செயல்பாட்டினால் அந்த புதைகுழியில் மண்ணை போட்டு மூடி விட்டனர்.
தா. பாண்டியன், அறவாணன், பெ. மணியரசன் போன்ற அறிஞர்களின் பேச்சை கேட்கும்போது,  தமிழன் என்பவன் எவ்வளவு கோழையாக, உரிமைக்கு போராடாத பிணமாக, கேவலமானவர்களாக  இருந்து வருகின்றான்? என்ற வேதனையை தாங்க முடியவில்லை.
தமிழனை வழிநடத்தும் தலைவர்கள் துரோகிகளாக இருந்துள்ளனர். இவர்கள் செய்த தேசியம் என்ற பிரச்சாரத்தினால், இத்தனை பிரச்னைகள், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன கன்னடத்து வழி வந்து ஈரோட்டில் குடியேறிய பெரியாரை எத்தனை பேர் எதிர்த்தார்கள்?
அவர் சொன்ன திராவிடன் கதையை சிந்திக்காமல் கேட்டு, நாம் ரசிக்கத்தானே செய்தோம். திராவிடன் என்று சொன்ன பெரியார் தமிழன் இல்லை என்று சிந்திக்கவில்லையே?
திராவிடன் என்று சொல்லித் திரியும் முட்டாள்கள் இருக்கும் வரையில் தமிழன் நிலை   இதுதான். எத்தனை நாள்தான் முட்டாளாக இருக்க வேண்டும்? தமிழன்தான் முடிவு செய்ய வேண்டும்.

1 comment:

  1. நல்ல அருமையான கேள்விகள்.
    ஒருத்தனுக்கு அதுல ஆதாயம் இல்லையின்ன, உடனே தேசியம் பேசுவது ஒரு யுக்தியாக கொண்டுள்ளார்கள்.

    ReplyDelete