Saturday, March 17, 2012

சத்தியமூர்த்தி பவன், இளங்கோவன், பிரியாணி...!


டக்ளஸ் காமெடிகள்:

தமிழகத்தில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை உருவாக்கிய நாளிதழ் என்ற பெருமை அந்த நிலத்தின் பெயரை கொண்ட குறைவாக விற்பனையாகும் நாளிதழுக்கு எப்போதும் உண்டு. அந்த நாளிதழில் வேலை செய்த அறிவையும், நிலவையும் பெயராக  கொண்ட அந்த நிருபரின் நடவடிக்கை இப்போது நினைத்தாலும், வயிறு வலிக்கும். அந்த அளவுக்கு விவரம் கெட்ட நிருபர் அவர்.
இந்த பதிவில், அந்த அறிவையும், நிலவையும் பெயராக கொண்ட அந்த பத்திரிகையாளர்தான் டக்ளஸ்.  இந்த டக்ளஸ், வெகுளியானவர். தற்பெருமைக்காரர். யாராவது புகழ்ந்து பேசினால் போதும், கர்ணனாக மாறிடுவார்.
அப்போது குறைவாக விற்பனையாகும் ஒரு வாரப்பத்திரிகையில் நிருபராக வேலை செய்தேன். மாதக்கடைசி. கையில் பணம் இல்லை. ஒரு நிருபரை பார்த்தேன். விவரம் சொன்னேன்.
சாப்பிட்டியா...? என்றான்.
இல்லை... என்றேன்.
என் கையிலும் பணம் இல்லை. ஆனால் நீ பிரியாணி சாப்பிட போற. பணமும் கிடைக்க போது என்றான் அந்த நண்பர். எனக்கு பயம். ஏதோ வம்பில் சிக்க வைத்து விடுவானோ என்று. பின்னர் சில விபரங்களை சொன்னான். சிரித்துக் கொண்டே தலையாட்டி விட்டு விடைப் பெற்றேன்.  நேராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு போனேன். அங்கு டக்ளஸ் உட்கார்ந்திருந்தார். அவர் எனக்கு வயதில் மூத்தவர்.  
“என்ன அண்ணே...! ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேட்டிக் கேட்டேன். உங்களிடம் பெர்மிஷன் வாங்கச் சொல்லுறாரு...?”  என்று ஐடியா சொன்ன நிருபர் சொல்லிக் கொடுத்த டயலாக்கை  பேசினேன்.  “தெரியாம போச்சுண்ணே, தெரிஞ்சுருந்தா உங்க கிட்டேயே அப்பாயின்மென்ட் வாங்கியிருப்பேண்ணே?”  என்றேன்.
நடிகர் திலகம் சிவாஜியின் குரலில், “என்ன தம்பி சொல்ற...! அவர் என்ன சொன்னாரு...?’ முகத்தில் பல கோடி பெருமையால் வரும் சிரிப்புடன்  டக்ளஸ் கேட்டார்.
“இல்லண்ணே, ஒரு பேட்டி போடலாம்னு நினைச்சு, அவருக்கு  போன் போட்டேன். அதுக்கு அவர் டக்ளசிடம் அனுமதி வாங்குன்னு சொல்லிட்டாருண்ணே...!” என்றேன்.
“அப்படியா சொன்னாரு...! சரி அவருகிட்ட பேசிட்டு அப்பாயின்மென்ட் வாங்கித் தாரேன். சாப்பிட்டியா... தம்பி” என்று மீண்டும் சிவாஜி குரலில் கேட்டார்.
“இல்லண்ணே...” என்றேன்.
“சரி வா...”  என்று என்னை ஓட்டலுக்கு அழைக்கும்போதே, அங்கிருந்த 2 நிருபர்களையும் அழைத்தார். பெருமை பேச.  4 பேரும் ஓட்டலுக்கு சென்றோம். “இளங்கோவன்கிட்ட பேட்டி வேணும்னு தம்பி கேட்டானா? அவரு என்கிட்ட பெர்மிஷன் வாங்கச் சொல்லிட்டாராம். என் மதிப்பை பார்த்தீங்களா...?  இருக்காதா பின்னே...? எத்தனை வருஷமா காங்கிரஸ் ஏரியா பார்க்கிறேன். நிருபருக்கு மதிப்பு கொடுக்கிறதுன்னா  இளங்கோவன்தான். அவரை விட்டா வேறு ஆளே இல்லை. நம்மள கண்டாலே  அத்தனை காங்கிரஸ்காரங்களும்  நடுங்குராங்கல்ல... அந்த அளவுக்கு அவங்கள வைச்சிருக்கேன்...!. இப்பத்தான் என் மதிப்பு தம்பிக்கு தெரிசுருக்கு. சரி ஒரு பேட்டிய வாங்கி போடட்டும். நம்மாள முடிஞ்ச உதவி, அவ்வளவுதான்” என்று தற்பெருமை பேசிக்கிட்டு இருந்தாரு டக்ளஸ்.
ஆனா காலையில் இருந்தே சாப்பிடாத நான், காடை, கவுதாரின்னு சைடீஸ்சுகளுடன் கோழி பிரியாணியை வயித்துக்குள் தள்ளிக் கொண்டு இருந்தேன். உடன் வந்த 2 நிருபர்களுக்கும், விவரம் எல்லாம் தெரியும். டக்ளஸ் பேசுவை கேட்டு, ஆமாண்ணே... நீங்க யாரு... எவ்வளவு பெரிய நிருபரு...? என்று ஜால்ரா போட்டப்படி சாப்பிட்டனர். பில் 400 ரூபாயை தாண்டி இருந்தது.
நடக்க முடியாமல் ஓட்டலை விட்டுவெளியில் வந்தேன்.
தம்பி... சிகரெட்...! என்று மீண்டும் சிவாஜி குரலில் டக்ளஸ்.
“ஆமாண்ணே...” என்றேன்.
ஒரு சிகரெட் இல்ல. 2 பாக்கெட் சிகரெட் வாங்கி கொடுத்தார். பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டேன். மீண்டும் சத்திய மூர்த்தி பவன் வந்தோம். “தம்பி... நீயே கஷ்டப்படுவ... இந்தா  வைச்சுக்கோடா...”  என்று சிவாஜி டயலாக்கில், என் சட்டை பையில் 200 ரூபாய் திணித்தார்.
“சரி, நாளைக்கு இளங்கோவனிடம்  பேசி அப்பாயிண்மென்ட் வாங்கித் தாரேன்னு” டக்ளஸ் சொல்லி முடிக்க, நான் இடத்தை காலி செய்தேன். மூத்த பத்திரிகையாளர், அவரை இப்படி ஏமாற்றி விட்டோமே என்று மனதில் சிறு வலி இருந்தாலும், நடந்த விஷயத்தை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டே நடையை கட்டினேன்.
மறுநாள், மதியம் சரியாக 2 மணிக்கு டக்ளஸ் எனக்கு போன் செய்தார். “தம்பி  எங்கப்பா இருக்கிற...? இளங்கோவன் சார் சத்திய மூர்த்தி பவனில் உனக்காக காத்திருக்காரு. அவர் கிட்ட விவரம் கேட்டேன். அப்படி யாரும் பேசலையேன்னு சொல்லுறாரு. இருந்தாலும் பரவாயில்லை, உனக்கு பேட்டிக் கொடுக்க காத்திருக்காரு. உடனே வா...! என்றார் டக்ளஸ்.
எனக்கு வயிறே கலங்கி விட்டது. அலுவலகத்தில் பேட்டி விபரத்தைப் பற்றி பேசவே இல்லை. இவர் வேறு, இளங்கோவனை  உட்கார வைத்துக் கொண்டு கூப்பிடுகிறார். விளையாட்டா பேசினது வினையா போயிருமோ... என்ன செய்வது ?” என்று ஒரே யோசனை.
உடனே டக்ளசுக்கு போன் செய்தேன். “அண்ணே, இந்த வார ஸ்யூவுக்கு  பக்கம் எல்லாம் முடிஞ்சிடுச்சி. அடுத்த வாரம்தாண்ணே பேட்டி வேணும்” என்றேன்.
“அப்படியாப்பா... இப்ப நீ வரல... சரிப்பா... இளங்கோவன் நீ வருவன்னு சாப்பிடாம உட்கார்ந்திருந்தாரு. சரி அவரை போகச் சொல்லிடுறேன். நீ அடுத்த வாரம் ஞாபகப்படுத்து. அண்ண உனக்கு இளங்கோவன்கிட்ட பேட்டி வாங்கித் தாரேன். ஓ.கே.வா...’ என்றார் சிவாஜி டயலாக்கில்  டக்ளஸ்.
எனக்கு ஓண்ணும் ஓடல. மதியம் 2 ஆகி விட்டது. நாம் ஏதோ ஒரு தாமாசுக்காக செய்த சேட்டை, இப்படி மாறி விட்டதேன்னு ? வருத்தப்பட்டேன். 11 வருஷம் கடந்து ஓடினாலும், சத்திய மூர்த்தி பவனை கடக்கும்போது, டக்ளஸ், பிரியாணி, இளங்கோவன், பேட்டி இவையெல்லாம் எண்ணத்தில் புகுந்து தனியாக சிரித்துக் கொண்டே போவேன்.  ரோட்டில் போகிறவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்துச் செல்வார்கள். ஆனால் அவர்களுக்கு விபரம் தெரியாதே....?

சத்தியமூர்த்தி பவன், இளங்கோவன், பிரியாணி...!


டக்ளஸ் காமெடிகள்:





தமிழகத்தில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை உருவாக்கிய நாளிதழ் என்ற பெருமை அந்த நிலத்தின் பெயரை கொண்ட குறைவாக விற்பனையாகும் நாளிதழுக்கு எப்போதும் உண்டு. அந்த நாளிதழில் வேலை செய்த அறிவையும், நிலவையும் பெயராக  கொண்ட அந்த நிருபரின் நடவடிக்கை இப்போது நினைத்தாலும், வயிறு வலிக்கும். அந்த அளவுக்கு விவரம் கெட்ட நிருபர் அவர்.
இந்த பதிவில், அந்த அறிவையும், நிலவையும் பெயராக கொண்ட அந்த பத்திரிகையாளர்தான் டக்ளஸ்.  இந்த டக்ளஸ், வெகுளியானவர். தற்பெருமைக்காரர். யாராவது புகழ்ந்து பேசினால் போதும், கர்ணனாக மாறிடுவார்.
அப்போது குறைவாக விற்பனையாகும் ஒரு வாரப்பத்திரிகையில் நிருபராக வேலை செய்தேன். மாதக்கடைசி. கையில் பணம் இல்லை. ஒரு நிருபரை பார்த்தேன். விவரம் சொன்னேன்.
சாப்பிட்டியா...? என்றான்.
இல்லை... என்றேன்.
என் கையிலும் பணம் இல்லை. ஆனால் நீ பிரியாணி சாப்பிட போற. பணமும் கிடைக்க போது என்றான் அந்த நண்பர். எனக்கு பயம். ஏதோ வம்பில் சிக்க வைத்து விடுவானோ என்று. பின்னர் சில விபரங்களை சொன்னான். சிரித்துக் கொண்டே தலையாட்டி விட்டு விடைப் பெற்றேன்.  நேராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு போனேன். அங்கு டக்ளஸ் உட்கார்ந்திருந்தார். அவர் எனக்கு வயதில் மூத்தவர்.  
“என்ன அண்ணே...! ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேட்டிக் கேட்டேன். உங்களிடம் பெர்மிஷன் வாங்கச் சொல்லுறாரு...?”  என்று ஐடியா சொன்ன நிருபர் சொல்லிக் கொடுத்த டயலாக்கை  பேசினேன்.  “தெரியாம போச்சுண்ணே, தெரிஞ்சுருந்தா உங்க கிட்டேயே அப்பாயின்மென்ட் வாங்கியிருப்பேண்ணே?”  என்றேன்.
நடிகர் திலகம் சிவாஜியின் குரலில், “என்ன தம்பி சொல்ற...! அவர் என்ன சொன்னாரு...?’ முகத்தில் பல கோடி பெருமையால் வரும் சிரிப்புடன்  டக்ளஸ் கேட்டார்.
“இல்லண்ணே, ஒரு பேட்டி போடலாம்னு நினைச்சு, அவருக்கு  போன் போட்டேன். அதுக்கு அவர் டக்ளசிடம் அனுமதி வாங்குன்னு சொல்லிட்டாருண்ணே...!” என்றேன்.
“அப்படியா சொன்னாரு...! சரி அவருகிட்ட பேசிட்டு அப்பாயின்மென்ட் வாங்கித் தாரேன். சாப்பிட்டியா... தம்பி” என்று மீண்டும் சிவாஜி குரலில் கேட்டார்.
“இல்லண்ணே...” என்றேன்.
“சரி வா...”  என்று என்னை ஓட்டலுக்கு அழைக்கும்போதே, அங்கிருந்த 2 நிருபர்களையும் அழைத்தார். பெருமை பேச.  4 பேரும் ஓட்டலுக்கு சென்றோம். “இளங்கோவன்கிட்ட பேட்டி வேணும்னு தம்பி கேட்டானா? அவரு என்கிட்ட பெர்மிஷன் வாங்கச் சொல்லிட்டாராம். என் மதிப்பை பார்த்தீங்களா...?  இருக்காதா பின்னே...? எத்தனை வருஷமா காங்கிரஸ் ஏரியா பார்க்கிறேன். நிருபருக்கு மதிப்பு கொடுக்கிறதுன்னா  இளங்கோவன்தான். அவரை விட்டா வேறு ஆளே இல்லை. நம்மள கண்டாலே  அத்தனை காங்கிரஸ்காரங்களும்  நடுங்குராங்கல்ல... அந்த அளவுக்கு அவங்கள வைச்சிருக்கேன்...!. இப்பத்தான் என் மதிப்பு தம்பிக்கு தெரிசுருக்கு. சரி ஒரு பேட்டிய வாங்கி போடட்டும். நம்மாள முடிஞ்ச உதவி, அவ்வளவுதான்” என்று தற்பெருமை பேசிக்கிட்டு இருந்தாரு டக்ளஸ்.
ஆனா காலையில் இருந்தே சாப்பிடாத நான், காடை, கவுதாரின்னு சைடீஸ்சுகளுடன் கோழி பிரியாணியை வயித்துக்குள் தள்ளிக் கொண்டு இருந்தேன். உடன் வந்த 2 நிருபர்களுக்கும், விவரம் எல்லாம் தெரியும். டக்ளஸ் பேசுவை கேட்டு, ஆமாண்ணே... நீங்க யாரு... எவ்வளவு பெரிய நிருபரு...? என்று ஜால்ரா போட்டப்படி சாப்பிட்டனர். பில் 400 ரூபாயை தாண்டி இருந்தது.
நடக்க முடியாமல் ஓட்டலை விட்டுவெளியில் வந்தேன்.
தம்பி... சிகரெட்...! என்று மீண்டும் சிவாஜி குரலில் டக்ளஸ்.
“ஆமாண்ணே...” என்றேன்.
ஒரு சிகரெட் இல்ல. 2 பாக்கெட் சிகரெட் வாங்கி கொடுத்தார். பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டேன். மீண்டும் சத்திய மூர்த்தி பவன் வந்தோம். “தம்பி... நீயே கஷ்டப்படுவ... இந்தா  வைச்சுக்கோடா...”  என்று சிவாஜி டயலாக்கில், என் சட்டை பையில் 200 ரூபாய் திணித்தார்.
“சரி, நாளைக்கு இளங்கோவனிடம்  பேசி அப்பாயிண்மென்ட் வாங்கித் தாரேன்னு” டக்ளஸ் சொல்லி முடிக்க, நான் இடத்தை காலி செய்தேன். மூத்த பத்திரிகையாளர், அவரை இப்படி ஏமாற்றி விட்டோமே என்று மனதில் சிறு வலி இருந்தாலும், நடந்த விஷயத்தை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டே நடையை கட்டினேன்.
மறுநாள், மதியம் சரியாக 2 மணிக்கு டக்ளஸ் எனக்கு போன் செய்தார். “தம்பி  எங்கப்பா இருக்கிற...? இளங்கோவன் சார் சத்திய மூர்த்தி பவனில் உனக்காக காத்திருக்காரு. அவர் கிட்ட விவரம் கேட்டேன். அப்படி யாரும் பேசலையேன்னு சொல்லுறாரு. இருந்தாலும் பரவாயில்லை, உனக்கு பேட்டிக் கொடுக்க காத்திருக்காரு. உடனே வா...! என்றார் டக்ளஸ்.
எனக்கு வயிறே கலங்கி விட்டது. அலுவலகத்தில் பேட்டி விபரத்தைப் பற்றி பேசவே இல்லை. இவர் வேறு, இளங்கோவனை  உட்கார வைத்துக் கொண்டு கூப்பிடுகிறார். விளையாட்டா பேசினது வினையா போயிருமோ... என்ன செய்வது ?” என்று ஒரே யோசனை.
உடனே டக்ளசுக்கு போன் செய்தேன். “அண்ணே, இந்த வார ஸ்யூவுக்கு  பக்கம் எல்லாம் முடிஞ்சிடுச்சி. அடுத்த வாரம்தாண்ணே பேட்டி வேணும்” என்றேன்.
“அப்படியாப்பா... இப்ப நீ வரல... சரிப்பா... இளங்கோவன் நீ வருவன்னு சாப்பிடாம உட்கார்ந்திருந்தாரு. சரி அவரை போகச் சொல்லிடுறேன். நீ அடுத்த வாரம் ஞாபகப்படுத்து. அண்ண உனக்கு இளங்கோவன்கிட்ட பேட்டி வாங்கித் தாரேன். ஓ.கே.வா...’ என்றார் சிவாஜி டயலாக்கில்  டக்ளஸ்.
எனக்கு ஓண்ணும் ஓடல. மதியம் 2 ஆகி விட்டது. நாம் ஏதோ ஒரு தாமாசுக்காக செய்த சேட்டை, இப்படி மாறி விட்டதேன்னு ? வருத்தப்பட்டேன். 11 வருஷம் கடந்து ஓடினாலும், சத்திய மூர்த்தி பவனை கடக்கும்போது, டக்ளஸ், பிரியாணி, இளங்கோவன், பேட்டி இவையெல்லாம் எண்ணத்தில் புகுந்து தனியாக சிரித்துக் கொண்டே போவேன்.  ரோட்டில் போகிறவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்துச் செல்வார்கள். ஆனால் அவர்களுக்கு விபரம் தெரியாதே....?

Friday, March 16, 2012

புரட்சி செய்வீர் முதல்வரே?


புரட்சி செய்வீர் முதல்வரே?

என்ன புரட்சி செய்தாரோ தெரியவில்லை. ஆனால் பெயருக்கு முன்பு புரட்சி தலைவி என்று போட்டுள்ளார் நமது முதல்வர். ஆனால் உண்மையில், அவர் புரட்சி தலைவி என்ற பெயரை எல்லா தரப்பு மக்களிடமிருந்து பெறவேண்டும் என்றால், அவர் முதலில் அண்ணா நுõற்றாண்டு நுõலக கட்டடத்தை இடிக்க வேண்டும்.
அப்படி இடிக்கும் பட்சத்தில்,  தீக்குளிப்பேன் என்கிறார் தாத்தா. (இல்லையென்றால் அவர் இறக்கவே மாட்டார்) தாத்தாவை வெடிப்போட்டு வழியனுப்ப தயாராக இருக்கும் எங்களை போன்ற பேரன்களின் ஆசைக்காவது, ஒரே ஒருமுறை நுõலக கட்டடத்தை முதல்வர் இடிக்கவேண்டும்.  இதன் மூலம் புரட்சிதலைவி என்ற பட்டம் சரியானதுதான் என்று அப்பாவி தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
2009ம் ஆண்டு கொடூரமாக கொத்துக் கொத்தா தமிழினம் இலங்கையில் பாஸ்பரஸ் குண்டுக்கு பலியான போது, முதல்வராக இருந்தபோது என்ன செய்தார். இலங்கை தமிழர்கள் அனுபவித்த கொடுமையை தாங்க முடியாமல், வீரத்தமிழன் முத்துக்குமார் தீக்குளித்தானே? அப்போது என்ன செய்தார். போராட்டத்தை அடக்க போலீசாரை ஏவி விட்ட கேவலமானவர்தானே?
தமிழகத்தை ஒன்று திரட்டி போராட்டத்தில் குவித்தாரா? மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தாரா? தான் கேட்ட அமைச்சர் பதவி பேரனுக்கு கிடைக்கவில்லை என்றதும், 2004ம் ஆண்டு மத்திய அரசை மிரட்டினாரே? துடித்துடித்தாரே?  அந்த துடிப்பு, போராட்டம், மிரட்டல் ஆகியவற்றில் ஒரு சதவீதம் காட்டியிருந்தால்கூட, இலங்கை தமிழர்களின் சாவு எண்ணிக்கை குறைந்து இருக்குமே?
1980ம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆரின் தம்பியாக பிரபாகரன் உலா வந்தார், அவரை வைத்து அரசியல் செய்ய முடியவில்லை என்ற வேதனை பல காலமாக மனதில்வைத்தே, புலிகளை வேரோடு அறுத்து எறிய காரணமாக இருந்தாரே?
பிரபாகரனை ஒரு தமிழனாக பார்க்காமல், எதிரியாக பார்த்து, இலங்கை கொடுமைகளை ரசித்து பார்த்தாரே? கடற்கரையில் 3 மணிநேரம், உண்ணாவிரதம் என்ற பெயரில்  ஏர்கூலர், சாமினா பந்தல் உள்ளிட்டவைகளுக்கு விளம்பரப்படுத்துவது போல், காலுக்கும் தலைக்கும் ஏர்கூலர்களை வைத்து உண்ணாவிரதம் இருந்தாரே? நமக்கு மனைவி ஒன்று, துணைவி ஒன்று, வேறு எவனுக்கும் இது கிடையாது. எல்லாரும் வயிறு எரியட்டும் என்ற உள்நோக்கத்துடன், தலைக்கடியில் ஒரு மனைவி, காலுக்கடியில் ஒரு துணைவியை வைத்து உண்ணாவிரதம் நாடகம் நடத்தினாரே?
தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் ஆதரவு போராட்டம் நடந்து விடக்கூடாது என்று மத்தியஅரசுக்கு கூஜா துõக்கிக் கொண்டு, போராட்டம் நடத்திய சீமான் உள்ளிட்ட தலைவர்களை எல்லாம் சிறைக்குள் துõக்கிபோட்டாரே?
மதிப்புக்குரிய பேராசிரியர் அன்பழகன் மூலம், இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் பேச வைத்து எச்சரிக்கை செய்தாரே? கொத்துக் கொத்தாக பெண் புலிகள் கற்பழிக்கப்பட்டு, நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்ததை கண்டும் மனம் உருகாமல், வேடிக்கை பார்த்தாரே?
தமிழகமே கொதித்துப் போய்கிடந்தபோது, 2009ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தலைவி சோனியாவின் காலில் கிடந்த கூட்டணி அமைத்தாரே? அதுவும், சாதி தலைவனாக உலா வந்த என் சகோதரன் திருமாவளவன், இலங்கை தமிழர்களுக்காக காங்கிரசை அழித்தே தீருவேன் என்று கூக்குரல் எழுப்பினார். அன்றில் இருந்து தமிழனத்தின் தலைவனாக மாறினான். அந்த அன்புச் சகோதரனையும் அரசியல் சித்து வேலை செய்து, காங்கிரஸ் காலில் விழவைத்தாரே?  தீவு திடலில் நடந்த கூட்டத்தில் எல்லா தலைவர்களின் பெயர்களை தவறாமல் சொன்ன சோனியா, திருமா பெயரை மட்டும் சொல்லாமல், அவமானப்படுத்தினாரே? அதை கண்டிக்காமல் மவுனம் காத்தாரே?
தமிழக பெண்களின் கற்பை தரம் தாழ்த்தி பேசிய குஷ்பு, ஒரு நிகழ்ச்சியில் திருமாவை அசிங்கப்படுத்தினாரே? அதே குஷ்புவை இப்போது வாரிசு போல் உடன் அழைத்துக் கொண்டு திரியும் இந்த வெக்கங்கெட்ட தலைவர் இருந்து என்ன பயன். திருமாவுக்கு ஏற்பட்ட அவமானம்தான் ஒட்டுமொத்த தமிழனுக்கும் ஏற்படும்.
அதுவும் அவரே தீக்குளித்து மடிய தயாராக இருக்கும்போது, இந்த வாய்ப்பை முதல்வர் விட்டு விடக்கூடாது.
அண்ணா நுõற்றாண்டு நுõலகத்தை இடம் மாற்றம் செய்வதில் எந்த தமிழனுக்கும் உடன்பாடில்லை. அது அங்குதான் இருக்கவேண்டும். உலக தரம்வாய்ந்த நுõலகம் தமிழனுக்கு பயன்பட வேண்டும். அந்த கட்டடத்தை வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது. நுõலகத்துக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் கூட, தீக்குளிப்பேன் என்ற வாத்தையை கேட்ட பின்னர், உள்ளம் மகிழ்ந்து, கட்டடத்தை இடிக்க சம்மதம் என்று கூறுகின்றனர்.
அதனால், ஒரே ஒருமுறை நுõலகத்தை இடித்து புரட்சி செய்யுங்கள் முதல்வரே ?
கோடான கோடி தமிழர்கள் உங்களுக்கு விஷ்வாசமாகவும், நன்றிக்கடனுடனும் இருப்பார்கள்?