Thursday, December 3, 2015

சென்னை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதியாக இருப்பவர் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி. இவர், தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழுவின் செயல் தலைவராக உள்ளார்.  இவர், அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கன மழையின் காரணமாக வெள்ளம் புகுந்து வீடுகளை இழந்து நிற்கும் பொதுமக்களுக்கு, மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு மூலம் மாவட்ட நீதிபதிகள் அடிப்படை உதவிகளை செய்துக் கொடுக்கவேண்டும். மாவட்ட அளவில் உள்ள சட்டப்பணி ஆணைக்குழு மற்றும் மாற்றுமுறை சமரச தீர்வு மையம் கட்டிடங்களில் வீடு இழந்தை பொதுமக்களை தங்க வைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகளை செய்துக் கொடுக்கவேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுடன், ஒருங்கிணைந்து மாவட்ட முதன்மை நீதிபதிகள் செயல்படவேண்டும்.
இவ்வாறு நீதிபதி சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி கூறியுள்ளார்.
................