Sunday, October 30, 2011

போதி தர்மர் சர்ச்சையை தீர்க்க 7ம் அறிவு வேண்டும் ...? தமிழா



காஞ்சிபுரத்தில் இருந்து போதி தர்மர், சீனாவுக்கு சென்று தற்பாதுகாப்பு கலைகளை பரப்பினார் என்று ஏழாம் அறிவு சினிமா படம் வெளி வந்துள்ளது. ஆனால் போதி தர்மர் தமிழரே கிடையாது என்று கண்டன போஸ்டர்களை சென்னை முழுவதும் ஒட்டியுள்ளனர் நாகர் சேனை அமைப்பை சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து அந்த அமைப்பினர் செய்தி தொடர்பாளர் பரஞ்சோதி பாண்டியனிடம் பேசியபோது, ‘7ம் அறிவு படம் வெளியானதும் ஒவ்வொரு தமிழனும் கர்வத்துடன் நடப்பான் என்று அந்த படத்தின் இயக்குனர் முருகதாஸ் பேட்டியளித்துள்ளார். ஆனால் போதி தர்மர் தமிழனே கிடையாது.
அவரை காஞ்சிபுரத்தை சேர்ந்த பல்லவ இளவரசர் என்று படத்தில் கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் போதி தர்மர் களப்பிரர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர். களப்பிரர் கர்நாடகா மாநிலம் பெல்லாரி மற்றம் ஆந்திராவில் கடப்பா ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள்.
முருகதாஸ் சொன்னது போல், போதி தர்மர் பல்லவ பரம்பரையாக இருந்தாலும், பல்லவரும் தமிழர் கிடையாது. ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து சிம்ம விஷ்னு என்பவர் தலைமையில் பல்லவர்கள் வந்தனர். இவர்கள் களப்பிரர் ஆட்சிக்கு கீழ் சிற்றரசர்களாகவும்,
தளபதியாகும் இருந்தனர். பின்னர் சிவ கந்த வர்மன், கந்த வர்மன் 1, 2,3, என்றும் ஆட்சி செய்தனர். இதில் மகேந்திர வர்மன் மகாபலிபுரத்தை உருவாக்கினான். அவனுக்கு பின்னால் வந்த நரசிம்ம வர்மன் தமிழகம் முழுவதும் நாடுகளை பிடித்து ஆட்சி செய்துள்ளான்.
எனவே போதி தர்மன் என்பவர் பல்லவராக சொன்னாலும், அவரும் தமிழர் கிடையாது.
போதி தர்மரை சீனாவில் 27வது புத்தராக வணங்கப்படுபவர். நோபாளத்தில் பிறந்து பீகாரில் வாழ்ந்த புத்தரை பீகார்காரன் என்று குறுகிய வட்டத்துக்கு கொண்டு வருவதை ஏற்பார்களா?
அதுபோல போதி தர்மர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்பதற்காக அவரை தமிழர் என்று சொல்ல முடியாது. களப்பிரர் காலம் 250 முதல் 600 வரையாகும். களப்பிரர் காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் இருண்ட காலம் என்கின்றனர். 
525ம் ஆண்டு சீனாவை நோக்கி போதி தர்மர் சென்றார். அந்த காலக்கட்டத்தில் களப்பிரர் ஆட்சி வீழ்ச்சியடைய தொடங்கி விட்டது. இதற்கு காரணம், அசோகரின் கொள்ளு பேரனை கொலை செய்து புஸ்யமித்திரன் என்ற தளபதி ஆட்சியை பிடித்தான். இவன் வடமாநிலங்களில், பவுத்தர்களின் தலையை கொண்டு வந்தார் 10 ஆயிரம் தங்ககாசுகள் பரிசாக வழங்கினான்.
இதனால் பவுளத்தர்கள், சமணர்கள் என்று பலர் தென்பகுதிக்கு ஓடி வந்தனர். 6ம் நுõற்றாண்டில் சைவ மத எழுச்சி ஏற்பட்டது. இதில், ‘மதுரையில் 9 ஆயிரம் பவுத்தர்கள், திருநெல்வேலியில் 16 ஆயிரம் பவுத்தர்கள், திருவத்திபுரம் (செய்யாறு) 15 ஆயிரம்பவுத்தர்கள் கழு மரம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர்.
பவுத்தம், ஜைனர்கள் தமிழகத்துக்கு வந்த பின்னரே, சாதி பாகுபாடு ஏற்பட்டது. அதுவரை சேரி என்ற பகுதியே கிடையாது.  தலித்துக்கள் எல்லாரும் பவுத்த மதத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பவுத்தர்களை சைவர்கள் கொலை செய்யும்போது, அமைதியாக இருந்து விட்டனர். இவர்களை ஒதுக்கி, தீண்டதகாதவர் என்றாக்கி விட்டனர்.
பவுத்தம் மதம் மூலம் தான் பள்ளி வந்தது. பள்ளிக்கு செல்பவன் பள்ளன் ஆனான். பவுத்த மத பிரசாரத்தை பறைசாற்றியவன் பறையன் ஆனான். சக்கிளியர் என்கிறார்களே, அவர்கள் எல்லாரும் சாக்கியலிச்சாவியர் என்ற புத்தர் பரம்பரையாவர். இந்த புத்தரின் மரபணு இந்த மக்களின் உடலில் இன்றும் இருப்பதால்தான், மலை போன்று மலம் கிடந்தாலும் அருவருப்பு இல்லாமல் அதை சுத்தம் ö சய்கின்றனர். இவர்களது மரபணுக்களை ஆய்வுச் செய்தால், உண்மை தெரியும்.
இதற்கிடையில்  களப்பிரர் ஆட்சி வீழ்ச்சியடைய தொடங்கியபோது, 525ம் ஆண்டு சீனா நோக்கி போதி தர்மர் சென்றார். இவர் மட்டுமல்ல தென்காசியில் இருந்து வஞ்சர போதியும் சீனா சென்றார். இவர் மந்திராயம், தந்திராயத்தை அங்கு கற்றுக் கொடுத்தார். காஞ்சிபுரத்தில் இருந்து தர்மபாலர் என்பவர் நாகலாந்தா பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் முதல்வராக பணியாற்றியுள்ளார். இவர்தான் யுவான்சூவானை சந்தித்து பேசியவர்.

போதி தர்மர் யார் என்று தெரிய வேண்டும் என்றால், மயிலை சினி வேங்கடசாமி எழுதிய பவுத்தமும் தமிழரும், களப்பிரர் காலத்தில் தமிழகம் என்ற புத்தகத்தை படித்தாலே தெரிந்து விடும்.
இப்படி வரலாறு இருக்க, போதி தர்மர் தமிழர் என்று சித்தரித்து படம் எடுத்து இருப்பது, பணத்துக்காகத்தான். இவர்கள் வரலாறு தெரியாமல் இப்படி திரித்து கூறுவதை தவறு. தமிழர்களின் உணர்ச்சியை துõண்டி விட்டு, லாபம் சப்பாதிக்கப் பார்க்கின்றனர்.
இப்படி மூச்சு விடாமல் சொல்லி முடித்தார் பரஞ்சோதி பாண்டியன்.
இந்த வரலாற்று கண்டனம் தெரிவித்துள்ள பரஞசோதி பாண்டியனின் குற்றச்சாட்டு குறித்து முருகதாசை தொடர்புக் கொண்டபோது, அவரை பிடிக்க முடியவில்லை. எது எப்படியோ போதி தர்மர் தமிழர்தான் என்பது வரலாற்று சான்றுடன் விளக்குவாரா முருகதாஸ்? என்பதுதான் எல்லாருடைய கேள்வியாக இருக்கும்.
போதி தர்மர் யார்... ? எல்லாருயை 7வது அறிவும் வேலை செய்தால்தான் தெரியும்.
த மிழன் என்ற வரலாற்று உண்மைக்கு கூட எதிர்ப்பா... ? வேதனையாக இருக்கிறது அல்லவா ...? வரலாற்று ஆய்வை மேற்கொண்டு நிருப்பிக்க வேண்டும் தமிழ் தோழா... !

Saturday, October 8, 2011

தமிழனுக்கு துரோக தலைவர்கள்: மலையாளிகள் எப்போதும் பகையாளிகள்தான்


:

பேராசிரியர் யோகீசுவரன் எழுதிய திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு என்ற புத்தகம் வெளியீட்டு விழா  அண்மையில் சென்னை தேவநேயப் பாவணர் அரங்கில் நடந்தது. அந்த  நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன்.
தலைவர்களின் பேச்சுக்களை எல்லாம் கேட்டேன்.  நிகழ்ச்சி முடிந்து வெளியில் வரும்போது, மனவேதனையடைந்தேன்.
எப்போது நாம் திருந்துவோம் ?  என்ற கேள்வி எழுந்தது. அதற்கான காரணங்களையும், தலைவர்களின் கருத்துக்களையும் கொஞ்சம் படியுங்கள். தமிழகம், தமிழ், தமிழன் ஆகிய மூன்றும் வளம் பெற நாம் முயற்சிக்க வேண்டாமா?

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், ‘பேசியே நாட்டை கெடுத்த தலைவர்கள். அந்த பேச்சை கேட்டு நாசமாகபோன மக்கள்’ என்று சூடான வார்த்தைகளுடன் பேச்சை தொடங்கினார்.
‘பல்கலைகழகமோ , காசுக் கொடுத்து படிக்க வேண்டிய நிலையோ இல்லாத அந்த காலத்தில் மணல் பரப்பி எழுதப் படித்த காலத்தில் ஆயிரத்து 330 குறள்களை வள்ளுவன் எழுதினான். அந்த குறள் போல, ஆயிரத்து 331வது குறளை இதுவரை எவனும் எழுதியதும் கிடையாது. எழுதப்பட்ட குறளில் கூறப்பட்டதை பின் தொடர்ந்து யாரும் வாழ்ந்ததும் கிடையாது’ என்றார்.
விவிலியம் ஹீப்ரூ, லத்தீன் மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்று சொன்ன மத குருக்கள், பிரான்ஸ் நாட்டில் நடந்த புரட்சியை ஓடுக்க, ஜோகன்பார்க் தேவாலாயம் முன்பு பேராட்டக்காரர்களை தீ வைத்து எரித்தனர்.
ஜெர்மனியில் எழுதப்பட்ட புத்தகத்தை தமிழகத்தில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர். அதுவும் தடை செய்யப்பட்ட புத்தகம் என்றால், அதை தேடி பிடித்து படித்து விடுவோம்.  ஆனால் மொழி வழி மாநிலம் அமைய நடந்த போராட்டம் குறித்து இந்த தலைமுறையினருக்கு தெரிந்து கொள்ளும் விதமாக எழுதப்பட்ட இந்த புத்தகத்தை எத்தனை பேர் படிப்பார்கள்?
ஒரே மொழி பேசும் தெலுங்கு மக்களிடம் தனித் தெலுங்கானா கேட்டு போராட்டம் நடக்கிறது. அந்த பிரச்னையை தீர்க்க 6 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசும் ஆலோசனை செய்து வருகிறது. முடிவு எடுத்தபாடிலில்லை.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார். சரி ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று ஒரு குழுவை அமைத்தது மத்திய அரசு. அந்த குழு நடத்திய முதல் கூட்டத்தில், ஊழல் என்றால் என்ன? அதன் வரையறை என்ன? என்று ஆய்வு செய்கிறது.
இதற்கு முன்பு இந்து என்ற மததத்தை வரையறை செய்ய நேரு, ராஜேந்திரபிரசாத் ஆகியோர் தலைமையில் தீவிர ஆலோசனை செய்யப்பட்டது. மற்ற மதங்கள் எல்லாம் மனிதர்களால் தொடங்கப்பட்டது. இந்து மதம் என்பது தெய்வத்தால் தொடங்கி வைக்கப்பட்டது. கல் தோன்றி, மண் தோன்றா காலத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது இந்து மதம் என்றெல்லாம் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
இந்து மதத்தில் சைவர், வைணவர் என்று பல பிரிவுகள் உள்ளது. இப்போது இந்து என்றால் எப்படி வரையறை செய்வது?  இரவு பகலாக விவாதித்தனர் தலைவர்கள்.
சமஸ்கிரத புலவர்கள் எல்லாம் ஆலோசனை செய்தார்கள். 6 மாதங்களுக்கு பின்னர், இந்து மதத்தை வரையறை செய்தனர். எப்படி தெரி
யுமா?
கிறிஸ்துவர், முஸ்லீம், பார்சி மதத்தை சேராதவர்கள் யாரோ அவர்கள் இந்துகள் என்று அழைக்கப்படுவார்கள் என்று முடிவு செய்தனர். யாரெல்லாம் கிறிஸ்துவர் இல்லையோ, யாரெல்லாம் முஸ்லீம் இல்லையோ, யாரெல்லாம் பார்சி இல்லையோ அவர்கள் எல்லாரும் இந்துக்கள் என்று அருமையாக கண்டு பிடித்தனர்.  எவ்வளவு பெரிய கண்டு பிடிப்பு.
இதேபோன்ற கண்டு பிடிப்புதான் தமிழகம். எப்படி என்று கேட்கிறீர்களா? கேரளா, ஆந்திரா, கர்நாடகா  ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் எடுத்ததுபோக,  மிச்சம் இருப்பது தமிழகம்.  இப்படித்தான் அப்போது மொழி வாரியான மாநிலம் அமைக்கப்பட்டது.
தேசியம் என்ற பெயரில் இதை எல்லாம் நாம் விட்டுக் கொடுத்தோம்.
தன்னையும், தன் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாக்க முடியாமல் இழந்து விட்டால், அவற்றை எல்லாம் இறக்குமதி  செய்ய முடியாது.
காவிரி நதி  2 பாறைக்கு மத்தியில் இருந்து விழுகிறது. அதில் ஒரு மின்நிலையம் அமைத்து மின்சாரம் தயாரிக்கலாம். ஆனால் இரு மாநில மக்கள் பிரச்னையால், அதுவும் நடக்கவில்லை.  தண்ணீர் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை வேறு.
அசாம் மாநிலத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் 9 மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 7 மாநிலங்கள் மின்சாரத்தை பெற்று பயனடைகிறது. ஆனால் காவிரியில் ஒரு மின்நிலையம் கூட அமைக்க முடியவில்லை.
மொழிவாரி மாநிலம் பிரியும்போது தமிழன் தேசியம் பேசினான். மலையாளிகள், கர்நாடகத்தார் எல்லாம் தங்களது இனத்தை பேசினர். அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள். நாம் இப்படி இருக்கிறோம்.
இப்படி தா. பாண்டியன் பரபரப்பாகவும், சிந்திக்கச் செய்யும் தகவல்களுடன் பேசி முடித்தார்.
இதன்பின்னர் பேசிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் க.ப. அறவாணன், ‘வடபகுதியில் கவனம் செலுத்திய தேசிய கட்சியும், திராவிட கட்சிகளும் தென் தமிழகத்தின் மீது கவனம் செலுத்தாது வருத்தம் அளிக்கிறது. ஈழ தமிழன் கொத்துக் கொத்தாக செத்து மடியும் போது, அது அவன் பாடு என்று இருந்த தமிழக தமிழன் எப்படி உருப்படுவான்? செக்கஸ்லோவியா பிரச்னையில் அமெரிக்க குண்டு சீன துõதரகத்தின் மீது விழுந்தது. ஒட்டுமொத்த சீனாவும் ஒன்று திரண்டது. அமெரிக்கா மன்னிப்பு கேட்டது.’
ஆனால் 1 லட்சத்து 30 ஆயிரம் தமிழன் குண்டு மழையில் செத்து மடியும் போது, தமிழகத் தமிழன் எல்லாரும் டி.வி.யில் சினிமா  பார்த்துக் கொண்டிருந்தோம்.
எப்போதுமே மலையாளிகள், தமிழர்களை எதிரிகளாக பாவிக்கிறார்கள். இலங்கைப் போரில் தமிழன் கொத்துக் கொத்தாக மடிந்ததற்கு காரணமே மலையாளிகள்தான். வரலாற்றில் மலையாளிகள் எப்போதுமே புத்திசாலிகள். அதனால்தான் சேர, சோழ, பாண்டியன் என்று பாண்டியன் கடைசியில் வருகிறான். சேரன் முதலிடத்துக்கு வருகிறான்.
இலங்கைத் தமிழன் சாவுக்கு சிவசங்கர மேனன், எம்.கே. நாராயணன், அந்தோணி, நிருபமாராவ் ஆகிய 4 மலையாளிகள்தான் காரணம்.  இவர்கள் மத்திய அரசை ஆட்டிப்படைக்கின்ற மலையாளி கூட்டங்களின் தலைவர்கள்
மலையாளிகள் சாதுர்யமானவர்கள், மதி கூர்மையானவர்கள்.
சென்னையில் இருக்கிற கடலுக்கு வங்காள விரிகுடா. வங்காளம் எங்கு இருக்கிறது. சென்னை எங்கு இருக்கிறது? யோசித்துப் பாருங்கள் ஏன் அந்த கடலை பழமையான நகரமான மைலாப்பூர் கடல், திருவல்லிக்கேணி கடல் என்று ஏன் அழைக்க தமிழன் முயற்சிக்கவில்லை. மற்றொரு கடலின் பெயர் அரபிக் கடலாம். அரேபியா எங்கு இருக்கிறது? தமிழகம் எங்கிருக்கிறது? அந்த அளவுக்கு தமிழன் துõங்கியிருக்கிறான்... மாடு...?
கன்னியாகுமரி மாவட்ட தமிழர்கள் போராட்டம் நடத்தவில்லை என்றால், அந்த தமிழர்கள் பகுதிகளை எல்லாம் கேரளத்துக்கு கொடுத்து இருப்பார்கள்.
உலகில் ஐரோப்பிய முறை, யூதமுறை, நீக்ரோ முறை என்று 3 விதங்கள் உள்ளன. இதில் ஐரோப்பிய முறை என்றால், ஒரு இடத்துக்கு வருவார்கள், காலனி அமைப்பார்கள். அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு தங்களது மொழியை கற்றுக் கொடுப்பார்கள். அந்த மக்களின் பழக்க வழக்கங்கள், கலாசாரங்களை அழிப்பார்கள். தங்களது கலாசாரத்தை திணிப்பார்கள். ஆசியாவிலேயே ஜப்பானியர்கள் மட்டுமே ஐரோப்பா முறையில் இருந்து தப்பித்தனர்.
இரண்டாவது யூத முறை. இவர்கள் கேரளா, மேற்கு வங்காளத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளனர். இந்த மக்கள், தங்களது பழக்கம், வழக்கம், மொழி ஆகியவற்றை தீவிரமாக பின்பற்றுவார்கள். ஆனால் குடியேறிய பகுதிகளில் உள்ள மக்களிடம் திணிக்க மாட்டார்கள். அதேநேரம் அப்பகுதியில் உள்ள மக்களின் பழக்க வழக்கம், கலாசார, பண்பாடுகளையும் பின்பற்ற மாட்டார்கள். சீர்குலைக்கவும் மாட்டார்கள். இன்று கூட கேரளா, மேற்குவங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ள யூதர்கள், ஹீப்ரூ மொழியில்தான் வழிபாடுகளை நடத்துகின்றனர்.
மூன்றாவது ரகம், நீக்ரோ முறை. இந்த முறை, தம்முடைய பாரம்பரியம் பழக்க வழக்கங்களை துõக்கி வீசி விட்டு, பிறருடைய பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பின்பற்றும் பழக்கம் உள்ள முறை. இந்த முறையைத்தான் தமிழனும் பின்பற்றுகிறான். நீக்ரோ முறைதான் தமிழன் முறை. கலாசாரம், பழக்க வழக்கம், பண்பாடு எல்லாவற்றையும் அழித்து வருகிறான்.
இப்படி அறவாணன் ஆவேசமாக பேசி முடித்தார்.
இதன்பின்னர் பேசிய தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் பெ. மணியரசன், ‘திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து தாய் தமிழகத்தை மீட்க துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த தியாகம் இப்போதுள்ள தமிழன் எத்தனை பேருக்கு தெரியும்?
இந்த போரட்டத்தின் கதாநாயகர்களான குஞ்சன்நாடார், நேசமணி ஆகியோரைப் பற்றியும் இந்த தலைமுறையினருக்கு தெரியாது.
தெற்கு போராட்டம் போல், வடதமிழக போராட்டத்திலும் 2 பேர் உயிர் துறந்துள்ளனர். பக்தவத்சலத்தின் நடவடிக்கையால் 300 பேர் இறந்துள்ளனர்.
இதெல்லாம் பள்ளி பாடப்புத்தகத்தில் சொல்லித்தரப்படுவதில்லை. 5 ஆண்டுகள் மட்டுமே முதல்வராக இருப்பவரின் வாழ்க்கை வரலாறு மாணவர்களுக்கு சொல்லித்தரப்படுகிறது.
தமிழனின் வரலாற்றையும் உண்மைகளையும், கலாசாரத்தையும் சொல்லித் தருவதில்லை. 
திருவிதாங்கூர் போராட்டத்தில், தேவிகுளமும், பீரிமேடும் நமக்கு கிடைத்திருந்தால், முல்லைப் பெரியாறு பிரச்னையே வந்து இருக்காது.
போராட்டக்காரர்கள் தேவிகுளத்தையும், பீர்மேட்டையும் எப்படியாவது தமிழகத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காமராஜரிடம் வலியுறுத்தினர். ஆனால், குளமாவது, மேடாவது? எல்லாம் நம்ம தேசத்தில்தானே இருக்கிறது என்றுகாமராஜர் கூறி விட்டார். திமுகவும் சம்பிரதாய போராட்டத்தை மட்டுமே நடத்தியது. உணர்வு பூர்வமாக நடத்தவில்லை.
ஆனால் மலையாளிகள், தமிழகத்தின் பெரும் பகுதியை கையகப்படுத்த அங்குள்ள தலைவர்கள் எல்லாம் ஒன்றாக, ஒற்றுமையாக செயல்பட்டனர். அந்த ஒற்றுமை தமிழகத்தில் இல்லை.
மலையாளிகள் தொடர்ந்து தமிழர்களை பகையாளிகளாக நடத்துகின்றனர். 
தமிழ்நாடு மலையாளிகள் சங்கத்தின் கூட்டம் சென்னையில் நடக்கிறது. கேரளா மாநிலத்தின் பிற மாநிலங்களில் வாழும் மலையாளிகள் நலத்துறை செயலர் மனோஜ்குமார் பங்கேற்று பேசுகிறார்.
ஆனால் தமிழகத்தில் அப்படி ஒரு துறை உள்ளதா? வெளிநாடுகளில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழ்குடிமகன் அமைச்சராக இருக்கும்போது கேட்டோம். செய்கிறேன் என்றார், அதன்பின்னர்  எந்த பதிலும் இல்லை.
ஆனால் கேரளா அதிகாரி மனோஜ்குமார், “சென்னையில் இருக்கும் மலையாளிகளுக்கு எல்லா உதவிகளையும் கேரளா அரசு வழங்கும். நிதி உதவியும் வழங்கும்  என்று பேசிச் சென்றுள்ளார். அது இந்து பத்திரிகையில் செய்தியாக வெளியாகியுள்ளது.
கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது விடுமுறை கிடையாது. ஆனால் தமிழகத்தில் வாழும் மலையாளிகளுக்கு ஓனம் பண்டிகைக்கு விடுமுறை வழங்கினார் கருணாநிதி.
கேரளா முதல்வர் அச்சுதானந்தன் கேட்டதால், கருணாநிதி விடுமுறை கொடுத்தார். ஆந்திரா முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் இறந்ததற்கு, தமிழகத்தில் கருணாநிதி விடுமுறை அறிவித்தார்.
தமிழகத்தில் துரோக அரசியல் கட்சிகள் ஆட்சி செய்வதால் இந்த நிலை. தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளுமே அப்படித்தான்.
கன்னியாகுமரியை இப்போதும் கேரளாவுடன் சேர்க்க வேண்டும் என்று நாயர் சங்கம் கேட்கிறது. 
ஒரே இனம், ஒரே மொழி கொண்ட மக்களை கொண்டே ஒரு தாயகம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் உலக நியதி. வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழகம் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். த மிழக குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதி. சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்றும் தொல்காப்பியத்தில் தமிழ்தேசம் என்றும் குறிப்புகள் வருகின்றன.
ஆனால் தமிழினம் என்பது 15 ஆண்டுகளில் கலப்பினமாக மாறி விடும்.  விரைவில் தமிழ்நாட்டில் தமிழன் 50 சதவீதம் பிற மாநிலத்தவன் 50 சதவீதம் என்ற நிலை வந்து விடும்’ என்று அவர் ஆவேசமாக பேசி முடித்தார்.
இந்த தலைவர்கள் பேச்சை கேட்கும்போது, தமிழர்களாகிய நமக்கு எவ்வளவு கேவலமாக இருக்கிறது?  காமராஜர், சி.சுப்ரமணியம், ராஜாஜி உள்ளிட்ட தலைவர்கள் தமிழர்களாக இருந்திருந்தால், முல்லைப் பெரியாறு பிரச்னையால் தமிழன் பாதிக்கப்பட மாட்டான். ஆனால் அந்த தலைவர்கள் எல்லாரும் இந்தியா, இந்தியர்கள் என்று சொல்லி நம் இனத்தை புதைகுழியில் தள்ளிவிட்டனர்.
சரி பெரியார், அண்ணா, கருணாநிதி நிலை என்ன என்றால், இவர்கள் எல்லாரும் திராவிடர்கள் என்ற நிலையில் இருந்தார்கள். ஒருவர் கூட தமிழனாக இல்லை. தேசியம் பேசிய தலைவர்களால் புதை குழியில் தள்ளப்பட்ட நம் இனம், இந்த திராவிட தலைவர்களின் செயல்பாட்டினால் அந்த புதைகுழியில் மண்ணை போட்டு மூடி விட்டனர்.
தா. பாண்டியன், அறவாணன், பெ. மணியரசன் போன்ற அறிஞர்களின் பேச்சை கேட்கும்போது,  தமிழன் என்பவன் எவ்வளவு கோழையாக, உரிமைக்கு போராடாத பிணமாக, கேவலமானவர்களாக  இருந்து வருகின்றான்? என்ற வேதனையை தாங்க முடியவில்லை.
தமிழனை வழிநடத்தும் தலைவர்கள் துரோகிகளாக இருந்துள்ளனர். இவர்கள் செய்த தேசியம் என்ற பிரச்சாரத்தினால், இத்தனை பிரச்னைகள், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன கன்னடத்து வழி வந்து ஈரோட்டில் குடியேறிய பெரியாரை எத்தனை பேர் எதிர்த்தார்கள்?
அவர் சொன்ன திராவிடன் கதையை சிந்திக்காமல் கேட்டு, நாம் ரசிக்கத்தானே செய்தோம். திராவிடன் என்று சொன்ன பெரியார் தமிழன் இல்லை என்று சிந்திக்கவில்லையே?
திராவிடன் என்று சொல்லித் திரியும் முட்டாள்கள் இருக்கும் வரையில் தமிழன் நிலை   இதுதான். எத்தனை நாள்தான் முட்டாளாக இருக்க வேண்டும்? தமிழன்தான் முடிவு செய்ய வேண்டும்.

Wednesday, October 5, 2011

ஏதோ எழுதியுள்ளேன்!

என் பார்வையில்... என் சொந்தக் கருத்தை தெரிவிக்க இந்த பிளாக் தொடங்கினேன். ஆனால் எழுத வில்லை. ஏதாவது பிளாக்கில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக சில காமெடிகளை போட்டுள்ளேன். மீண்டும் சொல்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். சிரிப்பதற்காகத்தான் எழுதினேன். உங்களுக்கு சிரிப்பு வராவிட்டாலும் பரவாயில்லை. கோபம் வரக்கூடாது. அதற்குத்தான் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். மன்னிங்க பிளீஸ்...!

அவனா..டி... நீ...?

அவனா..டி... நீ...?




டக்ளஸ் காமெடி: 2

டக்ளசுடன் ஒரு சப்-எடிட்டர் டாஸ்மாக் சென்றார். சரக்கு உ<ள்ளே போனதும், ‘டக்ளஸ்... ஏதாவது... அது... ? என்று கண்ணை சிமிட்டினார் சப் எடிட்டர்.  என்னய்யா... கேட்கிற என்று கோபத்தில் கேட்டான் டக்ளஸ்.
‘கைவசம் இருக்கா...? என்று அவர் கேட்டார்.
எத கேட்கிற? என்றான் டக்ளஸ்.
பிகரு... ஆண்ட்டி... ஏதாவது? உன்கிட்டத்தான் இருக்குமே...? என்றார் அவர்.
செம டென்ஷனான் டக்ளஸ். எல்லாரும் நம்மகிட்டேயே கேட்கிறானுங்க! என்று கோபத்தை மனசுக்குள் வைத்துக் கொண்டான்.
‘சூப்பர் பிகர்  இருக்கு. நீரோத்து வாங்கிக்க...! என்றான் டக்ளஸ்.
‘அப்படியா... ? என்று நாக்கை தொங்கப் போட்டப்படி மெடிக்கல் ஷாப்பிற்கு சென்றார் சப் எடிட்டர்.
டக்ளஸ் பைக்கில ஏறி உட்கார்ந்தார். வண்டி நேராக எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள மேம்பாலத்துக்கு கீழே நின்றது.  அங்கு, ‘தலை நிறைய மல்லிகைப் பூவுடன் பலபலக்கும் அழகிகள் வரிசை கட்டி நின்றனர். சப் எடிட்டருக்கு ஒரே சந்தோஷம்.
டக்ளஸ் சூப்பர்டா நீ...? உன்னையாலத்தான் முடியும் என்று வார்த்தைகளை அள்ளி வீசினார் மிஸ்டர் சப்பு.
அதன்பின்னர் அழகியை தேர்வு செய்தார் அவர் விருப்பம் போல், அந்த அழகியை தனியாக கூப்பிட்டு, டக்ளஸ் ஏதோ பேசினான். கையில் நுõறு ரூபாயை திணித்தான். சரி என்று தலையை ஆட்டியபடி அந்த அழகி, இருட்டு பகுதிக்குள் சப் எடிட்டரை அழைத்து சென்றது.
சிறிது நேரத்தில், ‘டக்ளஸ்... என்னப்பா? இது வேண்டாம்பா... ஏய்... தொடாதே... அப்படிப்பட்ட ஆளு நா கிடையாது. ஏய்... ஏய்... என்று கொஞ்சம் கொஞ்சமாக சப் எடிட்டர் அலறத் தொடங்கினார். 
ஒரு கட்டத்தில் பேண்ட், சட்டையை தோளில் போட்டப்படி நாலு கால் பாய்ச்சலில் சப் எடிட்டர் மேம்பாலத்தை நோக்கி ஓடி வர, பின்னால் அழகிகள் விரட்டினர். ரெடியாக பைக்கில் நின்றுக் கொண்டிருந்த டக்ளசுக்கு பின்னால் ஜட்டியுடன் உட்கார்ந்தார் சப் எடிட்டர்.
எப்பா... வண்டியை எடுப்பா! என்று அலறல் வேறு.
வண்டி கரும்புகையை அள்ளி வீசியபடி பறந்தது. ‘இந்த வேலைய செய்துட்டீயே...? இப்படி செய்வேன்னு கொஞ்சம் கூட நினைக்கல? என்று சப் எடிட்டர் புலம்ப தொடங்கினார். சிரித்தப்படியே டக்ளஸ் பைக்கை ஓட்டினான்.
புலம்பல் அதிகரிக்க, ஒரு கட்டத்தில் டக்ளஸ், ‘நானும் எவ்வளவுதான் பொறுமையா இருக்கிறது. எவன்  குடிக்க வந்தாலும், என்கிட்டத்தான் பிகரு இருக்கான்னு கேட்கிறான். நான் என்ன மாமாவா? இன்னைக்கு  நடந்ததை எல்லார்கிட்டேயும் சொல்லு. அப்பத்தான் பிகரு, பயி...ன்னு எவனும் கேட்க மாட்டான் என்று ஆவேசத்துடன் பேசி முடித்தான் டக்ளஸ்.
‘அதுக்காக அழகான பிகருன்னு சொல்லிட்டு, அரவாணிகிட்ட மாட்டி விட்டுட்டியேப்பா... என்று புலம்பியபடி பைக்கை ரோட்டோரமாக நிறுத்தச் சொல்லி, பேண்ட், சட்டையை ரோட்டோரமாக நின்று மாட்டினார் சப் எடிட்டர்.
அன்றில் இருந்து இன்று வரை டக்ளசிடம் பொம்பள மேட்டரை பற்றி பேசவே பலர் பயப்படுகிறது வேறு விஷயம்.  அந்த அழகி செய்த வேலையை சப் எடிட்டர் சொல்லக் கேட்டு சிரிக்காத நபரே இல்லை. அது தனிக் கதை...

கத்தியின்றி ரத்தமின்றி...! விழுப்புண் பெற்ற வீரர்கள்:


கத்தியின்றி ரத்தமின்றி...!  விழுப்புண் பெற்ற வீரர்கள்:
இது 2 போட்டோகிராபர்களின் காமெடி. அதில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை என்றாலும், எங்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர். மற்றொருவர் வாரப்பத்திரிகையில் பணியாற்றுகிறார்.
இந்த 2 கதாபாத்திரத்தில் ஒருவர் பெயர் மேனன். மற்றொருவன் அந்தோணி. 2 பெயருமே கற்பனைதான். (உண்மை சொன்னா கொன்னுடுவான்)
போட்டோகிராபர் மேனனுக்கு நல்ல சம்பளத்தில் வாரப்பத்திரிகையில் வேலைக் கிடைத்தது.  கோனிக்கா கலர் லேப்பில் மேனனை, அந்தோணி பார்த்து விட்டான். “டேய்.. மாப்பு... ட்ரீட் எங்கடா? ஒரு டீயாவது வாங்கித் கொடுத்தியா.? பிசினாரிப்பய...! என்று லேப்பில் இருந்த இளம் பெண்கள் முன்பு மேனனை, அந்தோணி கேவலப்படுத்தினான்.
மேனனுக்கு தாங்க முடியாத அவமானம். வார்த்தையால் அவமானப்படுத்தியது போதாது என்று மேனன் தலையில் அடித்தும், அவன் கேமிரா பையை இழுத்தும் வம்பு  இழுத்தான் அந்தோணி.
இதையெல்லாம் பார்த்த லேப்பில் இருந்த பெண்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அதில் ஒரு பெண் மீது மேனனுக்கு ஒரு கண் (காதல்) இருந்தது.  அந்தோணியின் அட்டகாசத்தால், அந்த பெண்ணும் விழுந்து விழுந்து சிரிக்க, மேனனுக்கு  தாங்க முடியாத அவமானம். லேபை விட்டு வெளியேறினான். இரவில் ஆப் பாட்டி ல்  சரக்குடன் மேனன் பிரஸ் கிளப் வந்தான்.
சரக்கை உள்ளே தள்ளியபடி, “அந்த முட்டா... பய,  அறிவே இல்லடா! எல்லா பிள்ளைங்க முன்னாலேயும் அசிங்கப்படுத்திட்டான். நாளைக்கு எப்படி அந்த லேபுக்கு போவேன். நான் மதுரக்காரன். ஒரே போடு... ” என்று மேனன் புலம்ப, சக போட்டோகிராபர்களுடன் அவனை சமாதானம் செய்தேன்.  அந்தோணியை அசிங்கமாக மேனன் பேசுவதை காதுக் கொடுத்து கேட்க முடியாத ஒரு போட்டோ கிராபர், அந்தோணிக்கு போன் செய்து விபரம் கூறினார்.
அவ்வளவுதான்... மேனன் செல்போன் லைனுக்கு அந்தோணி வந்து அசிங்கமாக பேச... இரண்டு பேரும் தங்கள் குடும்பத்தையே ... ?  இதில் வேறு, ‘டேய் நான் மதுரக்காரன்டா... என்று மேனனும், டேய் நான் மெட்ராஸ்காரன்டா கீசீடுவேன் என்று அந்தோணியும் டயாலக் வேற பேசி ஊரை கேவலப்படுத்தினர்.
ஒரு கட்டத்தில், நீ... அதே இடத்தில் இரு... நேரில் வருகிறேன் என்று அந்தோணி போனை வைத்து விட்டு எங்கிருந்தோ புறப்பட்டான். இருவருக்கும் பிரச்னை வந்து விடக்கூடாது என்பதற்காக 1 மணி நேரம் நாங்கள் காத்திருந்தோம்.
அந்தோணி வரவே இல்லை. இனி அவன் வர மாட்டான் என்று நினைத்து மேனனை அவனது ரூமுக்கு அனுப்பி வைத்தோம். அவரவர் வீட்டுக்கு 12 மணிக்கு புறப்பட்டோம்.
மறுநாள் காலையில் அந்தோணியை ஒரு பிரஸ் மீட்டில் பார்த்தேன். முகம் எல்லாம் காயங்களுடன் நின்றான்.
‘எவ்வளவு சொல்லியும் 2 பேரும் கேட்கலைலா? என்று ஆவேசப்பட்டேன்.  விபரத்தை சொன்னான், வாயை பொத்தியபடி சிரித்துக் கொண்டே இடத்தை காலி செய்தேன்.
மாலையில் மற்றொரு பிரஸ் மீட்டில் மேனனை பார்த்தேன். அவனும் முகம் வீங்கி நின்றான்.
அவன் சொன்ன விபரத்தை கேட்டு, வயிறே வலித்து விட்டது.  பேச முடியாமல் சிரித்துக் கொண்டே எல்லா போட்டோகிராபர்களுக்கும் போன் செய்து விபரம் சொன்னேன். 
விஷயம் பரவி நண்பர்கள் மத்தியில் எல்லாம் சிரிப்புதான்.
நாங்கள் வீட்டுக்கு போன பின்னர், மேனனும், அந்தோணியும் ஒருவருக்கு ஒருவர் போன் செய்து அசிங்கமாக மீண்டும்  திட்டிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் அடிப்பதற்கு தேடி அலைந்துள்ளனர். மேனன் தங்கியிருக்கும் ரூமுக்கு செல்லும் பாதையை அந்தோணி மறந்து விட்டான்.
மேனனை எப்படியாவது அடித்து உதைக்க வேண்டும் என்ற கோபத்தில் சுற்றித் திரிந்து அந்தோணியால், ரூமை கண்டு பிடிக்க முடியவில்லை.  போன் செய்தால், ‘வாடா நீ வாடா ரூமில் தாண்டா இருக்கேன்...! என்று மேனன் சவுண்ட் விட்டானே தவிர, ரூமுக்கு வரும் பாதையை சொல்லவில்லை.
அந்தோணியால் டென்ஷனை அடக்க முடியவில்லை.  பையில் வைத்திருந்த குவாட்டரை தண்ணீர் கலக்காமல் அடித்தான்.  மீண்டும் டூவிலரில் சுற்றினான்.  பாதை தெரியாமல் அங்கும் இங்கும் சுற்றியவனான்.  ஏற்கனவே செம போதை, இதில் ராவாக குவாட்டரை ஊத்தியதால், போதை தலைக்கு ஏறியது.
‘ரோட்டில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் வண்டியை விட்டான். பல்டி அடித்தான். உடலில் ரத்தம் வடிந்த நிலை எழுந்து நின்றான். கோபம் குறையவில்லை. அதிகரித்த நிலையில், மேனனுக்கு போன் செய்தான். செல்போன் சூட் ஆப் என்றது. செம கோபத்தில்,  விடியற்காலை 4 மணிக்கு ரத்த காயங்களுடன் வீட்டுக்கு போனான் அந்தோணி.
அதேநேரம் ரூமுக்கு வருவதாக வீரவசனம் பேசியவன் வரவில்லையே என்று அந்தோணியை தேடி மேனன் புறப்பட்டான். கட்டை கம்புடன் ரோட்டில் அழைந்துள்ளான். போதையில் தள்ளாடியபடி ரோட்டில் நடந்து சென்ற அவனை பார்த்த தெரு நாய்கள், ‘வந்துட்டான்டா வடிவேலு...!’ என்ற ரீதியில்  கூட்டணி அமைத்து விரட்டியது.
நாய் படையிடம் இருந்து தப்பிக்க, அலறியபடி அங்கும் இங்கும் ஓடினான் மேனன்.  அவனுக்கு என்பது போல் அமைக்கப்பட்டிருந்த குழிக்குள் காலை விட, பல பல்டி அடித்து எழுந்தான் ரத்தம் வடிந்தபடி.  கூடுதலாக செல்போன் பாதாளச் சாக்கடைக்குள் போனது, சூட்ஆப் ஆனது.
இப்படி ஒருவரை ஒருவர் பார்க்காமல், சண்டை போடாமல், விழுப்புண்கள் பெற்றனர் போட்டோ நண்பர்கள்.  இதை சொல்லி சொல்லி நாங்கள் சிரித்துக்கு கொண்டு மறுநாள் இரவு பிரஸ் கிளப்பில் அமர்ந்தோம். பக்கத்து டேபிளில், சிரித்து சிரித்து பேசியபடி, அந்தோணிக்கு மேனன் (சரக்கு) ஊத்திக் கொடுத்துக் கொண்டிருந்தான்.  விழுப்புண் பெற்றதற்காகவா?  வேலை கிடைத்தற்காகவா?  என்பது தெரியாது.

சோம்பேறி!

பிளாக் தொடங்கினேன் எழுதுவதற்காக... சோம்பேறியாய் இருந்து விட்டேன். என் நண்பனின் குடிபோதை காமெடிகளை டைப் செய்திருந்தேன். அதை முதல் போதையாக பதிவு செய்கிறேன். இதில் மாற்றுக் கருத்து இருக்கும் நண்பர்களிடம் முதலிலேயே மன்னிப்பு கோருகிறேன்.  எழுத்து பிழை இருந்தாலும் மன்னிக்கவும்:

ஒவ்வொருவடைய வாழ்க்கையில் தினமும் காமெடி சம்பவம் பல நடக்கத்தான்  செய்யும். ஆனால் அதை நினைத்து சிரிக்கும்போது மன சந்தோஷப்படும். அந்த சம்பவங்களை அசை போடும்போது, நம்முடைய நிலையை நினைத்து  சிரிப்பும், வெட்கமும் வரும். இப்படி ஒரு கதாபாத்திரம்தான் டக்ளஸ்.  உண்மை பெயர் வேறு என்றாலும், பாசத்தாலும், நெருங்கிய நட்பாலும் அவரை அப்படித்தான் நான் கூப்பிடுவேன்.
இவனது காமெடிகளை ரோட்டில் போகும்போது நினைத்து பல நாள் சிரித்து, எதிரே வருபவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்து சென்ற சம்பவங்களும் உண்டு.
டக்ளஸ் காமெடிகள் எல்லாம் டாஸ்மாக் சரக்கை மையமாக வைத்தே நடக்கும்.
அந்த அளவுக்கு ஒரு ரசிக்கும் படியான  காமெடி கேரக்டர் டக்ளஸ். உங்களையும் சிரிக்க வைக்க... அவனது அட்டகாசங்களை எழுதுகிறேன்.

தேரை இழுத்து தெருவில் விட்ட கதை...
டக்ளஸ் விளையாட்டு துறை நிருபர். இவனுக்கு துõங்கும் நேரம் என்பது அதிகாலை 3 மணி தான். அதுவும் இவன் வைத்திருந்த டூவிலர் , சத்தியத்துக்கு கட்டுப்பட்டு செயல்பட கூடியது. அவனை தவிர எந்த கொம்பனாலும் அந்த வண்டியை ஓட்ட முடியாது. பிரேக் என்றால் என்ன என்று?  கேட்கும் வண்டி. வண்டிக்கு சைடில் பெட்டி இருக்கும். ஆனால் அது ரோட்டில் இருந்து 10 இன்ச் உயரத்தில்தான் இருக்கும். அந்த அளவு பெட்டியும் மப்பில் மிதந்து வரும். மொத்ததில் 10 அடி முன்னே போனால், 15 அடி பின்னே வரும் அற்புதமான ரிஷப வாகனம்.
ஒருநாள், வயிறு நிறை டாஸ்மாக் சரக்குடன் இரவு 1 மணிக்கு பிரஸ் கிளப்பில் இருந்து அந்த வாகனத்தில் புறப்பட்டான்.  சரக்கு உள்ளே போனால் அவனுக்கு ஸ்ப்பீக்கர் அவுட்டாகி விடும். ஒரு முறைக்கு பல முறை சொன்னால்தான் அவனுக்கு புரியும்.
அந்த நடு இரவில், டூவிலருக்கு பெட்ரோல் போட  மவுண்ட் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கிற்குள் சென்றான். 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு விட்டு, வண்டியை கிளப்பினான்.
வண்டி ஆமை வேகத்தில் மெதுவாக நகர்ந்தது.  ஆக்சிலேட்டரை திருக்கியதில் மவுண்ட் ரோடே அலறியது. அவன் கண்டுக் கொள்ள வில்லை. ஆக்சிலேட்டரை திருக்கியபடி, காலை கீழே மிதித்து தள்ளியபடி வண்டியை கிளப்பினான். வண்டி நத்தை வேகத்தில் நகர்ந்து.
ரோட்டோரம் இருந்தவர்கள் எல்லாரும் அலறினர். மப்பில்,  அடைக்கப்பட்டிருந்த  அவனது ஸ்பீக்கருக்கு (காதுக்கு) கேட்கவே இல்லை. சொருகிய கண்ணால் பார்த்தபோது, பலர் அவனை நோக்கி கை நீட்டி சத்தம் போடுவது மட்டும் தெரிந்து. காதுக்கு அருகே, ‘யோவ்... யோவ்.. வண்டியை நிறுத்துயா... டேய் வண்டியை நிறுத்துயா...’ என்ற வார்த்தை கேட்டாலும், திருக்கிய ஆக்சிலேட்டரை டக்ளஸ்  விடவில்லை. பொதுமக்கள் எல்லாரும் அலறினர்.
பெட்ரோல் பங்கில் இருந்து 100 அடி துõரம் உள்ள டிராபிக் சிக்னல் வரை வந்து விட்டான். மக்கள் எல்லாம் அலறி அடித்து முன்னும் பின்னும் வருவதை அரை கண் பார்வையில் பார்த்த, ‘என்ன... என்ன...?’ ஆவேசமாக கேள்வி எழுப்பினான். பின்னால் இருந்து மீண்டும் யோவ்... டேய்.... சவுண்ட் கேட்டது.
திரும்பி பார்த்தால், இவன் டூவிலருடன் மற்றொரு டூவிலர் சிக்கி கொண்டிருந்தது. அதில் ஒருவன் மரண பயத்தில், யோவ் யோவ் என்று ஏதோ அலறினான். டக்ளசுக்கு போதை கொஞ்சம் குறைந்தது. ‘யோவ்... நீ ஏன்டா என் கூட வார...?’ என்று டக்ளஸ் கோபத்தில் கேட்டான்.
அதற்கு, ‘டேய் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட நின்னுக்கிட்டு இருந்தவனை இழுத்துட்டு வந்துக்கிட்டு எங்கிட்ட கேள்வி கேட்கிறீயா...? என்று அந்த டூவிலர் ஆசாமி எகிறினார்.
பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட டக்ளஸ் வண்டிக்கு அருகே டிவிஎஸ் எக்ஸ்செல் பைக்கில் அப்பாவி ஆசாமி நின்றார். டக்ளஸ் பெட்ரோல் போட்டு விட்டு வண்டியை நகர்த்தும் அதேநேரத்தில் அவரசத்தில் எக்ஸ்செல் வண்டியை முன்னே கொண்டு வந்துள்ளார் அந்த ஆசாமி. அப்போது டக்ளஸ் வண்டியில் இருந்த பெட்டியில், அவரது மொபட் பம்பர் சிக்கிக் கொண்டது. இதை கவனிக்காமல், ஆக்சிலேட்டரை திருக்கி திருக்கி 100 அடி துõரத்துக்கு அந்த ஆசாமியை டக்ளஸ் இழுத்து வந்து விட்டான். இதான் பிரச்னை. போதையிலும் அழகாக சிரிக்கும் டக்ளஸ், தன் புன்னகை சிரிப்பில் அந்த ஆசாமியை அனுப்பி வைத்து, வீடு போய் சேர்ந்தான்.