Tuesday, December 6, 2011

எப்படி விழித்து எழுவோம்....?


வக்கீல் சுதர்சன் என்ற  நண்பர் எனக்கு மெயில் அனுப்பியிருந்தார். எடுத்த எடுப்பிலேயே விழித்து எழு இந்தியனே என்று அழைப்பு வேறு விடுத்திருந்தார். படித்ததும் மெயிலை பலருக்கு அனுப்பு என்ற உத்தரவு வேறு...!
அப்படி என்ன மெயில் என்கிறீர்களா? அவர் அனுப்பிய ஆங்கில மெயிலின் தமிழாக்கம் இதுதான்:
டாடா கோடீஸ்வரராக 100 ஆண்டுகள் ஆனது. அம்பானிக்கு 50 ஆண்டுகள் ஆனது. ஆனால் ராபட் வதேராவுக்கு 10 ஆண்டுகள்தான். கோடீஸ்வரராக மாறி விட்டார்.
 சோனியா மற்றும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் கடுமையான மிரட்டலுக்கு பயந்து,  எல்லா செய்தி தாள்களும் ராபட் வதேராவை பற்றி எழுதுவதில்லை. ராபட் வதேரா பிரியங்கா காந்தியை திருமணம் செய்த பின்னர், அவரது தந்தை மர்மமான முறையில் தற்கொலை செய்துக் கொண்டார்.  அவரது சகோதரர் டில்லியில் உள்ள வீட்டில் இறந்து கிடந்தார். அவரது சகோதரி மர்மமான முறையில்  கார் விபத்தில் இறந்தார். இவையெல்லாம்  இந்திய ஊடகங்களில் செய்தியாக வெளியாக வில்லை.
நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள மால்களில் ராபட் வதேரா பங்கு வத்துளளார். டி.எல்.எப்., ஐ.பி.எல்., பங்கு வைத்துள்ளார். இந்த நிறுவனம்தான், காமென் வெல்த் விளையாட்டு போட்டியை மேம்படுத்தும் பொறுப்பு வகித்தது. ராபட் வதேராவின் உத்தரவின்படி, இந்த நிறுவனத்துக்கு சாதகமாக கல்மாடி செயல்பட்டார்.  காமென் வெல்த் மோசடியில் இந்நிறுவனத்துக்கு தொடர்பு உள்ளது. இந்த நிறுவனத்தின் நேரடி பங்குதாரராக ராபட் வதேரா உள்ளார்.
டில்லியில் உள்ள ஹில்டன் கார்டன்ஸ் ஓட்டல் உட்பட பல இடங்களில் உள்ள ஹில்டன் ஓட்டல்கள் ராபட் வதேராவுக்கு  சொந்தமானது. ராபட் வதேராவின் கூட்டாளியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பற்றி இந்திய ஊடங்கள் இதுவரை செய்தி வெளியிட்டது கிடையாது.
2 ஜி அலைவரிசை மோசடி வழக்கில் சிக்கியுள்ள யூனிடெக் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை ராபட் வதேரா வைத்துள்ளார். 2 ஜி மோசடியில் ராபட் வதேராவுக்கு நேரடி தொடர்பு இருப்பதால்தான், இந்த மோசடி வழக்கில் சி.பி.ஐ., விசாரணை தீர்க்கமான முடிவை எட்ட முடியாமல் உள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கியமான சொத்துக்களை சொந்தமாக வைத்துள்ளார். வர்த்தக மையங்கள், டாக்சி நிறுவனங்களை சொந்தமாக வைத்துள்ளார். குறிப்பாக சில தனியார் விமானங்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.
இவருக்கும் இத்தாலி நாட்டை சேர்ந்த குத்ரோச்சிக்கும் நேரடி தொடர்பு உள்ளது. 
சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு, வி.வி.ஐ.பி.,க்களுக்கு சிறப்பு அனுமதிகள் விமான நிலையத்தில் வழங்கும். அதுபோல நாட்டில் உள்ள எந்த ஒரு விமான நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எந்த பரிசோதனையும் செய்யப்படாமல் ராபட் வதேரா செல்லலாம், வெளியில் வரலாம்.
இதுபோன்ற மரியாதை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி முதல் தலாய்லாமா வரை 30 பேர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதில் இப்போது ராபட் வதேரா 31வது நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.  ராபட் வதேராவுக்கு இப்படி ஒரு மரியாதை எந்த அடிப்படையில் மத்திய அரசு வழங்கியது?
சோனியா காந்தியின் மருமகனுக்கு சலுகை காட்ட மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
இந்தியனே விழித்து எழு... ஊழலுக்கு எதிராக போராடு.
இப்படி அந்த மெயிலில் வக்கீல் நண்பர் கூறியுள்ளார். சரி, எப்படி போராட முடியும். அன்னா ஹாசரே நாட்டில் உள்ள இளைஞர்களில் 60 சதவீத  ஆதரவை திடீரென பெற்றார். அவருடன் இருந்த படித்தவர்கள் மீதும் பல குற்றச்சாட்டுக்களை வீசி, அடங்கி போக வைக்கின்றனர்.
நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், குறிப்பாக காங்கிரசுகாரன் மத்தியில் அன்னா ஹசாரே போன்ற தியாகிகள் எதிர்த்து நிற்பதே கடினமாக உள்ளது. புனிதர் என்று யாரையாவது சொல்லுங்கள், இந்த ஆட்சியாளர்கள் அந்த புனிதரின் ஆதி மூலத்தை தோண்டி எடுத்து அதில் ஏதாவது ஒரு தப்பை கண்டு பிடித்து, அதை மீடியாக்கள் என்ற ???? பயன்படுத்தி, கேவலப்படுத்தி விடுகின்றனர்.
அதையும் மக்கள் ஆர்வமாக படித்து, அதானே... இவனும் இப்படியா...? யோக்கியன் மாதிரி பேசுறான் என்று டீக்கடையில் நின்று பேசி, தவறான பிரசாரத்தை மக்கள் மத்தியில் கிளப்பி விடுகின்றனர்.
அப்புறம் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்த யாரால் முடியும்? அயோக்கியன்தான், யோக்கியன் என்று கூறி தலைமை தாங்குவான். அவனும் உள்நோக்கத்துடன், மக்கள் சக்தியை வழிநடத்தி, அதிலும் ஆதாயம் பெறுவான்.
இப்போதுள்ள சூழ்நிலையில், நாடு முழுவதிலும் பெரும்பான்மையான மக்கள் ஒட்டு மொத்த ஆதரவை கண் மூடித்தனமாக அன்னா ஹசாரேவுக்கு தெரிவிக்க வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுக்களை எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். நாட்டை வெள்ளையரிடம் இருந்து காப்பாற்றி அண்ணா ஹசாரே போன்றவர்கள்தான், இந்த கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றி நம்மிடம் வழங்க வேண்டும். (நாம என்ன செய்யனும்? சரக்கு அடிச்சிட்டு சினிமாவுக்கு போய்....)
அது அந்த தாத்தாவை போன்றவர்களின் கடமை என்று பேசுவோம் வாருங்கள்...?
விழித்து எழு என்று கூப்பிடுகிறார்? எப்படி விழித்து எழுவோம். தொப்புக் கொடி உறவு சிதைந்தபோது, டாஸ்மாக் கடையில் சரக்கு அடித்து இனம்தானே நாம். சினிமா தியேட்டரில் நடிகனின் கட்அவுட்டில் பாலாபிஷேகம் செய்த இனம் அல்லவா? ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11 அன்றுதான் பிரசவம் நடக்கும் என்று நாடு முழுவதும் பந்தயப்பணம் கட்டிக் கொண்டு இருந்த இந்த சமுதாயம் எப்படி விழித்து எழும்...? தமிழச்சி எல்லாம் கற்பழிக்கப்பட்டு, சிரழிக்கப்பட்ட போது, வேடிக்கை பார்த்தவங்க மத்தியில் எப்படி விழித்து எழ முடியும்?
இந்து பத்திரிகைக்கு பயிற்சி நிருபராக சீனாவில் இருந்த சில மாணவர்கள் வந்தனர். பயிற்சி எடுத்தனர், நாடு திரும்பினர். ஆனால் இந்து பத்திரிகைக்கு இன்டர்நெட் இணைப்புக்கு வந்த பில் பல லட்சம்.
என்னவென்று பார்த்தால், பயிற்சி முழுவதும் ஆபாச படங்களைதான் சீன மாணவர்கள் பார்த்துள்ளனர். இந்த தகவலை இந்து பத்திரிகை நண்பர் என்னிடம் சொன்னார். அப்போதுதான் தெரிந்தது, சீனாவில் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் கூட பார்க்க முடியாது, தடை  செய்யப்பட்டுள்ளது என்று.
அங்குள்ள மாணவர்களுக்கு செக்ஸ் படம் என்பது அரிதான விஷயம். ஆனால் நம்ம ஊர் மாணவர்கள், 8ம் வகுப்பு படிக்கும்போதே 8 அடி உயரம் உள்ள நீக்ரோவுக்கு எவ்வளவு......? என்ன செய்கிறான் என்று பார்க்கிறார்கள்.
ஐஸ்வர்யா ராய் ஓல்லியாக இருந்தாலும், முன்னழகும், பின்னழகும் எப்படி துõக்கலாக இருக்கிறது என்று ஆராய்ந்து, அதுபோல டவலப் செய்யும் நம்ம ஊர் கல்லுõரி மாணவிகள் எப்படி விழித்து எழுவார்கள்.
அந்த டவலப் செய்யப்பட்டதை பார்த்து பார்த்து ஏங்கி உடலை எல்லாம் வருத்தும் நம்ம ஊர் மாணவர்கள் எப்படி விழித்து எழுவார்கள்? ஒரு கல்லுõரி மாணவர்களுடன் ஊழலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அரசாங்க பணம்தானே அடித்துட்டு போகட்டும் என்றான் ஒருவன்.
டேய், அரசாங்க பணம் என்றால் அடிக்கலாமா? அது எங்கிருந்து வருகிறது? என்று தெரியாமல் கேட்டு விட்டேன்.
ரிசர்வ் பாங்கில் இருந்து வருகிறது என்றான். என்ன படிக்கிறாய் என்றேன். பி.ஏ., பொருளாதாரம் என்றான். சரி நாடு முன்னேறி விடும் என்று சொல்லி வாயை மூடிக் கொண்டேன்.
இப்படிப்பட்ட சமுதாயத்தில் விழித்து எழுடா என்கிறார் இந்த வக்கீல் நண்பர். விபரம் தெரியாத அன்பர்.   பாவம் விழித்து எழுவார்கள் என்று நம்புகிறார். எது எழும் என்று அவருக்கு தெரியாது போல...!

No comments:

Post a Comment